செய்திகள் :

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

post image

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை தொங்கியதை பார்க்க முடிந்தது.

சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கேஸ் நிலையம்
சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கேஸ் நிலையம்

ஈரான் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவுக்கு இறக்குமதியாக வேண்டிய எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர்.

அதேமாதிரி, தமிழகத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை எனவும் 21 நாடுகளுக்கு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் கே.பி.முரளி பேட்டியளித்திருந்தார். ஆனால், இன்று சென்னை மவுண்ட் ரோட்டில் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலும் CNG கேஸூம் ஸ்டாக் இல்லை என அறிவிப்புப் பலகைகள் போடப்பட்டு பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கிறது.

தேனாம்பேட்டையில் ஒரு பெட்ரோல் பங்க்
தேனாம்பேட்டையில் ஒரு பெட்ரோல் பங்க்

தேனாம்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்கில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் பெட்ரோல் கிடைக்கும் என விநோதமாக ஒரு பலகை தொங்கவிடப்பட்டிருக்க, வாகன ஓட்டிகள் தங்களின் நண்பர்களுக்கு அந்த பெட்ரோல் பங்கின் லொகேஷனை பகிர்ந்து சென்ற சம்பவங்களையும் பார்க்க முடிந்தது.

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. மக்களே உஷாராக இருங்கள் என பதற்றமடையச் செய்யும் வகையில் நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் வீடியோக்களும் செய்திகளும் பரவி வந்தன. இதைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் மக்கள் பெட்ரோல் பங்குகளை மொய்க்கத் தொடங்கினர். தமிழகத்தின் பல ஊர்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பிச் சென்றதை பார்க்க முடிந்தது. இந்த 'Panic Buying' காரணமாகத்தான் பெட்ரோல் பங்குகளில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

தேனாம்பேட்டை
தேனாம்பேட்டையில் ஒரு பெட்ரோல் பங்க்
திறக்கப்பட்டிருக்கும் கேஸ் நிரப்பும் நிலையத்தில் வரிசைக்கட்டிய ஆட்டோக்கள்
திறக்கப்பட்டிருக்கும் கேஸ் நிரப்பும் நிலையத்தில் வரிசைக்கட்டிய ஆட்டோக்கள்
மூடப்பட்டிருக்கும் பெட்ரோல் பங்க்
மூடப்பட்டிருக்கும் பெட்ரோல் பங்க்
அலைமோதும் கூட்டம்
அலைமோதும் கூட்டம்

மக்களின் அன்றாடத்தைப் பாதிக்கும் வகையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியிருக்கும் நிலையில், அரசுத் தரப்பில் முறையான விளக்கம் கொடுத்து பதற்றத்தைத் தணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்

தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலைத் தாண்டி ஒரு 'மூன்றாம் அணி' அமைவதற்கான முயற்சிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. விஜயகாந்தின் தேமுதிக (2006), மக்கள் நலக் கூட்ட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `சிலிண்டர்கள் இல்லை’- கைவிரிக்கும் ஏஜென்சிகள்.. அச்சத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு?

`எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை செய்தது...’மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெற... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? கையிருப்பு இருக்கிறதா? - தமிழக பெட்ரோலிய வணிக சங்கத் தலைவர் விளக்கம்

ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்ட... மேலும் பார்க்க

`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்'- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதல் வேகம் குறைந்து இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் ... மேலும் பார்க்க

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! - யார் இவர்?

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச்.12) பதவியேற்றிருக்கிறார்.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து கேரள ஆளு... மேலும் பார்க்க