செய்திகள் :

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! - யார் இவர்?

post image

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச்.12) பதவியேற்றிருக்கிறார்.

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து கேரள ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

யார் இந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்?

1954 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் பனாஜியில் பிறந்தவர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

தனது ஆரம்பக் கல்வியை கோவா மாநிலத்தின் வாஸ்கோடகாமாவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் பயின்ற இவர்

பின்னர் அதே பகுதியில் உள்ள எம்.இ.எஸ். கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

அவரது இளமைக் காலத்திலேயே சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்.

சிறை சென்ற அனுபவம்

இவரது தந்தை ஜனசங்கத்தின் கோவா மாநிலத் தலைவராக இருந்தவர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆர்எஸ்எஸ் உடன் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்.

பின்னர் 1989 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் தீவிரமாக செயல்பட தொடங்கினார்.

இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்த 1975 முதல் 1977 வரை இருந்த காலகட்டத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து சிறை சென்ற அனுபவமும் இவருக்கு இருக்கிறது.

 ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

கோவா சபாநாயகராக...

2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை கோவா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். மேலும் 2003 முதல் 2007 வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அதேபோல 2012 முதல் 2017 வரை கோவா சபாநாயகராக பதவி வகித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் கோவா சட்டமன்றத்தை இந்தியாவின் முதல் டிஜிட்டல் சட்டமன்றமாக அதாவது காகிதம் இல்லா சட்டமன்றமாக மாற்றியிருக்கிறார். இது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இமாச்சல், பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். தொடர்ந்து கடந்த ஆண்டு கேரள மாநிலத்தின் 23 ஆவது ஆளுநராகப் பதவியேற்ற இவர் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுராக பதவியேற்றிருக்கிறார்.!

`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்'- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதல் வேகம் குறைந்து இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 'பாதுகாப்பு எங்கே? இப்படி ஒரு ஆட்சி தேவையா?'- விஜய் காட்டம்

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் , படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு எதிராக க... மேலும் பார்க்க

ஸ்டாலின்: கழுத்தை நெறித்த கூட்டணிக் கட்சிகள்; புகைச்சலில் நிர்வாகிகள்! - தி.மு.க போடும் ஸ்கெட்ச்!

தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 9-3-2026 அன்று அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்ததும், “எங்கள் கட்சியின் உயர்... மேலும் பார்க்க

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! - என்ன நடந்தது!

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான்... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! - காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்!புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், கடற்கரை சாலையில் கலாசா... மேலும் பார்க்க