செய்திகள் :

'ஏழை மாணவர்களுக்கு முடிவெட்ட ரூ. 1 கட்டணம்' - சலூன் கடைக்காரரின் சேவை; பாராட்டும் ஓசூர் மக்கள்

post image

ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ. 1 கட்டணத்தில் முடி வெட்டும் சலூன் கடைக்காரரின் சேவையை ஓசூர் வட்டார மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

சலூன்
சலூன்

சலூன்கள் நவீனமயமாகி வரும் சம காலத்தில் முடி வெட்டுவதற்கான கட்டணமும் அதிகரித்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்குச் சாதாரண சலூனில் முடிவெட்டுவதே கஷ்டத்தை ஏற்படுத்தும் சூழலில் அதிகமாக வளர்ந்த பின்பு முடி வெட்டுகின்ற நிலையோ, அல்லது அப்படியே விட்டுவிடுகின்ற நிலையோதான் ஏற்படுகிறது.

இதனால் பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் ஆசிரியர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமலும், பொது வெளியில் சக மனிதர்களால் கேலிக்கு ஆளாகி, பல்வேறு உளவியல் சிக்கலைச் சந்திக்கிறார்கள்.

இந்நிலையில்தான் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சலூன் கடை நடத்தி வரும் தல்கூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, ஏழை எளிய மாணவர்களின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு கோடை விடுமுறை காலத்தில் ரூ. 1 கட்டணத்தில் முடி வெட்டுகிறார்.

வழக்கமாக சிறார்களுக்கு முடிவெட்ட ரூ. 100 வரை பல சலூன்களின் கட்டணமாக வாங்கப்படுகிறது. அப்படியுள்ள நிலையில் ஏழை மாணவர்களின் மீதான அக்கறையில் ரூ. 1 ரூபாய் பெற்று இந்தச் சேவையைக் கடந்த 3 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் மூர்த்தி.

மூர்த்தி
மூர்த்தி

இவரின் அறிவிப்பைத் தெரிந்துகொண்ட சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மாணவர்கள் இவர் கடையை நோக்கி தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள். இவரின் இந்த உன்னத சேவையை ஓசூர் வட்டார மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

வாழ்த்துகள் மூர்த்தி சார்.

விபத்துக்குப் பிறகு ஹெல்மெட் மாற்ற வேண்டுமா? EPS foam எதற்கு?- இது தெரியாமப் போச்சே?! - 24

ஹெல்மெட்டின் உட்புறத்தில் இருக்கும் வெள்ளை நிற EPS foam (Expanded Polystyrene) வெறும் அடைப்பான் மட்டுமல்ல; இது நம் உயிரைக் காக்கும் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பம்.ஒரு விபத்தின் போது உங்கள... மேலும் பார்க்க

'EB பில்லை அப்படியே மிச்சப்படுத்தலாம்' - ரூ.78,000 மானியத்துடன் அரசின் 'இலவச மின்சாரம்' திட்டம்!

எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன.இதில் சூரிய சக... மேலும் பார்க்க

பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு செக் வைத்த `மிரர் டெக்னிக்!'- நோபல் பரிசுக்குரிய ஐடியாவா?!

மைசூரு புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு குறிப்பிட்ட சுவர், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் ஒரு இடமாக இருந்து வந்தது. அதிகாரிகள் எத்தனையோ எச்சரிக்கை பலகைகள் வைத்தும் எந்த பயனும் இல்லை. அபராதங்... மேலும் பார்க்க