செய்திகள் :

'ஐந்தே ஐந்து' வாக்காளர்கள்தான்; அங்கேயும் வாக்குச்சாவடி; தமிழ்நாட்டின் வித்தியாச வாக்குச்சாவடிகள்!

post image

ஒவ்வொரு தேர்தல் தேதிகளிலும், 'காலையில் போனால் கூட்டமிருக்காது... வரிசையில் நிற்கத் தேவையில்லை...', 'இப்போது போனால் கூட்டமிருக்காது... அப்போது போனால் கூட்டமிருக்காது' என்று வெயிலில் இருந்து தப்பிக்கவும், கூட்டத்தில் இருந்து தப்பிக்கவும் ஏகப்பட்ட பிளான்களைப் போடுவோம்.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மிகவும் சொற்பமான வாக்காளர்களே வாக்களிக்கின்றனர்... வாக்களிக்கவும் உள்ளனர். அதனால், அவர்களுக்கு இந்தக் கவலை எல்லாம் இல்லை.

அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது.

எஸ்டேட்
எஸ்டேட்

அவை எங்கெங்கே என்பதைப் பார்க்கலாம்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வருசநாடு ஒன்றியத்தின் கீழ் வெள்ளிமலை வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் எஸ்டேட்டின் தொழிலாளர்களுக்காக இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடியில் ஐந்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

புலிகள் காப்பகமாக இவ்விடம் அறிவிக்கப்பட்ட பிறகு, வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளினால் பலர் அங்கிருந்து வெளியேறினர். இதனால் ஒரு சில வாக்காளர்களே தற்போது எஞ்சியுள்ளனர்.

செந்தில், ஜெயராணி, பாவெல், சுதா மற்றும் ரோஹித் என ஐந்து வாக்காளர்களே வாக்களிக்க உள்ளனர். இவர்கள் அங்கே உள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்கள். இதற்காக அதிகாரிகள் காட்டுக்குள் சென்று பயணிக்க உள்ளனர்.

கடந்த தேர்தலில், இங்கே வாக்காளர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்துள்ளது. இப்போது ஐந்து பேராகக் குறைந்துள்ளது.

போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர்

அடுத்ததாக, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் சென்ட்ரல் ஸ்டேஷன், ஊத்துக்காடு என்கிற இரண்டு வாக்குச்சாவடிகள் உண்டு.

இங்கே செல்ல எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால், இந்த வாக்குச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் 8 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். குறுகிய காட்டுப்பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாததால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பிற வாக்குச்சாவடி பொருள்களை எடுத்துச்செல்ல கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் குதிரைவெட்டி போன்ற இடங்கள் உள்ளன.

தேயிலைத் தோட்டத்தின் செயல்பாடு 2028-ம் ஆண்டோடு காலக்கெடு முடிவுக்கு வருவதால் தொழிலாளர்களின் குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்திலிருந்து சமவெளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.

கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பின் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்திற்குப் பிறகு வாக்காளர் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆகக் குறைந்தது.

மாஞ்சோலை
மாஞ்சோலை

இறுதி வாக்காளர் பட்டியலில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களைச் சேர்த்து மொத்தம் 78 ஓட்டுகள் மட்டுமே இருப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது. முன்பு 5 வாக்குச்சாவடிகள் மாஞ்சோலையில் இருந்தன.

தற்போது மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து என 3 வாக்குச்சாவடிகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

தற்போது ஊத்து வாக்குப்பதிவு மையத்தில் மொத்தம் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 10 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.

சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைப்பகுதி வழியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணிக்காக பயணிக்க உள்ளனர்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க