செய்திகள் :

ஒடிசா: மணமகன் முன்னிலையில் மணமகளை துப்பாக்கிமுனையில் கடத்திய காதலன்; என்ன நடந்தது?

post image

ஒடிசா மாநிலம் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள கந்தமால் என்ற இடத்தைச் சேர்ந்த ரேஸ்மி என்ற பெண்ணுக்கும் அதே மாவட்டத்தில் உள்ள காமக்யாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஹரிபந்து தனது கிராமத்தில் இருந்து மணமகள் வீட்டிற்கு உறவினர்களோடு திருமணத்திற்காக வந்திருந்தார். அவர்களுக்குத் திருமணம் வெகுவிமர்சையாக நடந்தது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் தனது மனைவியைத் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அவர்களோடு உறவினர்களும் சென்றனர். அவர்களது வாகனம் படாபந்தா என்ற இடத்தில் சென்றபோது அதனைச் சிலர் வழிமறித்தனர். காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் துப்பாக்கியுடன் வந்தனர்.

கல்யாணம்
கல்யாணம்

அவர்கள் ஹரிபந்துவை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மணமகளைக் கடத்திச்சென்றனர். இதனால் மணமகனும், உறவினர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். கடத்திச்சென்றது மணமகளின் முன்னாள் காதலன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மணமகளை நடுவழியில் கடத்திச்சென்றதால் வேறு வழியில்லாமல் ஹரிபந்து இது குறித்து அருகில் உள்ள போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மணமகளைக் கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். திருமணமானவுடன் மணமகளைக் கடத்திச்சென்றதால் மணமகன் ஹரிபந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ராஜஸ்தான்: 'கட்டாயத் திருமணம்?' - ஒரே நாளில் திருமணம் செய்யவிருந்த சகோதரிகள் தற்கொலை; பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் தீப் சிங். இவரின் மகள்கள் ஷோபா(25) மற்றும் விம்லா(23). இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டி... மேலும் பார்க்க

கும்பகோணம்: பாமக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு! - பின்னணி என்ன?

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வயது 20. திருமங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருக்கும் வயது 20. இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே பழகி ... மேலும் பார்க்க

சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின்‌ பிளான்

சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங்.சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ‌ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன.அதை எடுத்து வர, தன் கடைய... மேலும் பார்க்க

சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?

சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன?

நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்... மேலும் பார்க்க

சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ்

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கடைக்கு 20-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர், பார்சல் ஒன்றை வாட்ச்மேன் கிருஷ்ணா லால் என்பவரிடம் கொடுத்து, "இது உங்கள் கடையில் வேலை செய்யும் ஸ்ருத... மேலும் பார்க்க