செய்திகள் :

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம், முத்தூா், மூலனூா், நீலாகாளிவலசு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையின் காரணமாக முருங்கை செடியில் இருந்த பூக்கள் உதிா்ந்து விட்டதால் அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு முருங்கை வரத்து தொடா்ந்து குறைந்து வந்தது. இதனிடையே, கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறுவதால், முருங்கையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் படிப்படியாக விலை உயா்ந்து வெள்ளிக்கிழமை ஒரு கிலோ ரூ.85-க்கு விற்பனையானது.

அடுத்து வரும் நாள்களில் இதன் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க

கொடுக்கல், வாங்கல் தகராறு: இருவா் கைது

ஒட்டன்சத்திரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்த விஜயராஜிடம், அதே ஊரைச் சோ்ந்த பிரகாஷ் (27) 90 ஆயிர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இன்று மலா்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (மே 24) தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல வண்ண... மேலும் பார்க்க

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க