செய்திகள் :

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

post image

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை.

எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது.

இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது.

இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி கச்சா எண்ணெய் விலை குறித்துப் பேசியுள்ளார்.

கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி
கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி
அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்... அவர் சொல்வது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளலாம்.

உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் டாப் 15 நாடுகளில் கத்தாரும் ஒன்று. உலக அளவில் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் டாப் மூன்றாவது நாடு கத்தார்.

இந்த இடத்தில் இருக்கும் கத்தார், கத்தாரின் அமைச்சர் சொல்வது கச்சா எண்ணெய் வணிகத்தில் மிக முக்கியமானது.

அப்படி கத்தார் எரிசக்தி அமைச்சர் என்ன கூறியிருக்கிறார்?

"இப்போது ஈரானில் நடந்து வரும் போர் தொடர்ந்தால், வளைகுடா நாடுகள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் எரிசக்திகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்.

இது உலகின் எரிசக்திச் சந்தையைப் பெரிதும் பாதிக்கலாம். உலகப் பொருளாதாரங்களைக் கீழே தள்ளலாம்.

ஒருவேளை இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட்டாலும், வழக்கம் போல, கத்தார் தங்களது டெலிவரிகளை ஆரம்பிக்க வாரங்கள் அல்லது மாதங்கள் கணக்கில் ஆகும்.

மேலும், இந்தப் போர் ஒரு பேரல் எண்ணெயின் விலை 150 டாலருக்குக்கூட தள்ளலாம்" என்று ஃபைனான்சியல் டைம்ஸிற்குத் தந்த பேட்டியில் கூறியுள்ளார்.

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சம... மேலும் பார்க்க

"இந்தியா எங்களது சந்தையை 'இப்படி' பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை" - அமெரிக்கா

இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது..."20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த... மேலும் பார்க்க

`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்

இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்ய... மேலும் பார்க்க

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யே... மேலும் பார்க்க

28 + 1 எனும் மேஜிக் எண் வேலை செய்யுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க