செய்திகள் :

விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்

post image

மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், இது தாராவி மற்றும் பாந்த்ரா டெர்மிஸ் வரை நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் விமான நிலையத்தில் இருந்து நவிமும்பையில் உள்ள விமான நிலையத்திற்கு ரூ.22,862 கோடியில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மாதம் ரு.1,500 வழங்கும் திட்டம் தொடரும். அதோடு நவிமும்பையில் புதிய கல்வி நகரம் உருவாக்கப்படும். விவசாயிகளின் 2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். 2025ம் ஆண்டு செப்டம்பருக்கு முந்தைய கடன்கள் இத்திட்டத்தில் தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயிகளின் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பாந்த்ரா-வர்சோவா இடையிலான கடற்சாலை திட்டம் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இச்சாலை பின்னர் பயந்தர் வரை நீட்டிக்கப்படும்.

1000 மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராம சாலைகளும் கான்கிரீட் மயமாக்கப்படும். மும்பை வடாலாவில் 130 ஏக்கர் பரப்பில் ஸ்டார்ட்அப் வளாகம் உருவாக்கப்படும். மும்பை மற்றும் புனேயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்க சாலைகள் ஏற்படுத்தப்படும். பட்ஜெட்டில் திட்டச்செலவு ஒதுக்கீடு ரூ.7,69,467 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.40,552 கோடியாக இருக்கும். மொத்த பட்ஜெட்டில் 1,50,491 கோடி அளவுக்கு பற்றாக்குறை இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாய திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 295 அனிமேஷன் ஸ்டூடியோ உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளை குறிவைக்கும் சிற்றரசு; பின்னணியில் உதயநிதி? - யாருக்கு சீட், யாருக்கு கல்தா?

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துவருகின்றனர். கடைசி நாளான மார்ச் 6-ம் தேதி சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு வி... மேலும் பார்க்க

ADMK: கட்சிக்கு ரூட் க்ளியர்.. ஆட்சிக்கு? எடப்பாடி பழனிசாமி முன் நிற்கும் சவால் தான் என்ன?

அ.இ.அ.தி.மு.க-வை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் தொடர்ந்து வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் கொஞ்சம் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.ஜெயலலிதா மறை... மேலும் பார்க்க

இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! - இவர்கள்தான் வேட்பாளர்களா?

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.அக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அருண... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்!" - விஜயதரணி பேட்டி

தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி.க... மேலும் பார்க்க

விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா; திமுக MLA-வான மகனுக்காக எடப்பாடியை சந்தித்தாரா விக்கிரமராஜா?

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்... மேலும் பார்க்க

`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்... மேலும் பார்க்க