செய்திகள் :

'ஓ.பி.எஸ்க்காக உயிரை விட முடியுமா?' - 89 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

post image

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'என்னுடைய அறிவும் அனுபவமும் நாட்டுக்கு பயன்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார்தான் என்னை கட்சி தொடங்க வைத்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

அடையாள அரசியலும் கொள்கை அரசியலுமாக அரசியல் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை, பிறப்பின் அடிப்படையில் பிரிவினையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இந்த அரசியல் இயக்கத்தின் நோக்கம்.

பிராமணனாகப் பிறந்ததால் தலித்தாகப் பிறந்ததால் முஸ்லிமாகப் பிறந்தததால் இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என யாரும் சொல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். யாருக்கும் நாம் புறக்கணிக்கப்பட்டோம் என்கிற எண்ணம் இருக்கக் கூடாது.

ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்பதால் சிங்களர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவும் அந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ என தோன்றுகிறது. இது அழிவுப்பாதை.

சமத்துவ சமவாய்ப்பு சமுதாயத்தை நோக்கிச் செல்லும் அறநிலைதான் என்னுடைய அரசியல்.

இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

எங்களிலேயே யாரேனும் போட்டியிட விரும்பினால் எங்களுடன் ஒத்துப்போகும் கொள்கை உடையவர்களின் கட்சியோடு அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.

தேர்தலிலில் நிற்பது பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பது மட்டும்தானா. ஒரு புது சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் என்பது இடையிடையே வரும் சடங்குகள். வேண்டுமானால் அதில் கலந்துகொள்வோம். ஆனால், அதுவே அரசியலல்ல.

இந்த கட்சியை தொடக்கி வைப்பது நானாக இருக்கலாம். தொடர்வது பொது மக்களாக இருக்கட்டும். ஓ.பி.எஸ் அத்தியாயம் ஓவர்!

அரசியல் என்பது ஒருவருக்கானதல்ல.

நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. ஓ.பி.எஸ்-க்காக உயிரையா விட முடியும்? வரும் தேர்தலில் திமுக-வுக்கும் விஜய்க்கும் தான் போட்டி' என்றார்.

“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” - செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுக கூட்ட... மேலும் பார்க்க

ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் - கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில், கூட்டணி மாற்றம், தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும... மேலும் பார்க்க

"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" - ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட... மேலும் பார்க்க

இரான் மீது எப்போது தாக்குதல்? - ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்... மீண்டுமா? - அமெரிக்கா - இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல்... மேலும் பார்க்க

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!' - திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியா... மேலும் பார்க்க

வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! - தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!

தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு துருவங்கள் கோலோச்சிய காலத்தில... மேலும் பார்க்க