செய்திகள் :

கடலூர்: மாநகராட்சிக் கூட்டத்தில் தலைவர்களின் போட்டோ அட்ராசிட்டி! - கவுன்சிலர்களால் நொந்து போன மேயர்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.

கடலூர் மாநகராட்சியில் தி.மு.க-வுக்கு 27 கவுன்சிலர்களும், அ.தி.மு.க-வுக்கு ஆறு கவுன்சிலர்களும், வி.சி.க.வு-க்கு மூன்று கவுன்சிலர்களும், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பா.ம.க-வுக்கு தலா ஒரு கவுன்சிலர்களும் இருக்கின்றனர். இவர்களுடன் மூன்று சுயேச்சை கவுன்சிலர்களும் இருக்கின்றனர். மாநகராட்சியின் அலுவலகக் கூட்ட அரங்கில் மேயர் இருக்கைக்குப் பின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

கடலூர் மாநகராட்சி

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக முதல்வர் விஜய்யின் படம் சிறிய அளவில் மாட்டப்பட்டது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் `ஸ்டாலின் வாழ்க… ஸ்டாலின் வாழ்க' என்று கூறிக் கொண்டு அரங்கிற்குள் வந்த திமுக கவுன்சிலர்கள், `ஸ்டாலின் படத்தை எப்படி அகற்றலாம்?' என்று கோஷம் எழுப்பினர்.

அத்துடன், அகற்றப்பட்ட ஸ்டாலினின் புகைப்படத்தை மீண்டும் மேயர் இருக்கைக்குப் பின்னால் மாட்டினர். அவர்களையடுத்து `எடப்பாடி அவர்கள் வாழ்க' என்று கோஷம் போட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை மாட்டினர்.

தொடர்ந்து பா.ம.க கவுன்சிலர் சரவணன், `எங்க தலைவரோட படத்தை நானும் வைப்பேன்' என்று சொல்லி அன்புமணியின் ஸ்டிக்கரை ஒட்டினார். அப்போது, `அன்புமணி முன்னாள் முதல்வரா? அவர் படத்தை எப்படி மாநகராட்சி அரங்கில் ஒட்டலாம்?' என்று வாக்குவாதம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து வி.சி.க கவுன்சிலர்கள் அம்பேத்கரின் படத்தை மாட்டினர். அதனால் அங்கு ஏற்பட்ட வாக்குவாதங்களைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணியின் படங்களை தி.மு.க கவுன்சிலர்கள் அகற்றினர். அதனால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க, பா.ம.க கவுன்சிலர்களிடையே முற்றிய வாக்குவாதம், கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது.

உடனே சுதாரித்துக் கொண்ட மேயர் சுந்தரி, ``இதுதான் முதல் கூட்டம். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள ஏன் இப்படிப் பண்றீங்க?' அனுமதியின்றி கூட்ட அரங்கத்திற்குள் ஏன் வந்தீர்கள் ? அனைவரும் உடனே வெளியேறுங்கள்" என்று உத்தரவிட்டார்.

அத்துடன், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படத்தை மட்டும் விட்டுவிட்டு அனைத்துப் படங்களையும் அகற்றுமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் மேயர் சுந்தரி. அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அல்லது எடப்பாடி பழனிசாமி இருவரில் ஒருவரது படம்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதால், ஜெயலலிதா படம் மட்டும் வைக்கப்பட்டது. இந்தக் களேபரத்தால் அங்கிருந்து வெளியேறிய ஆணையர் கிஷன் குமார், சூழல் அமைதியானதும்தான் திரும்பி வந்தார்.

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பிய... மேலும் பார்க்க

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள்... மேலும் பார்க்க

US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை!

அமெரிக்கா... உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்க... மேலும் பார்க்க

`இயக்கம் அழிந்தால்கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென..'- அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " அனைத்திந்திய அண்ணா தி... மேலும் பார்க்க

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க