செய்திகள் :

கடலூா் துறைமுகத்தை சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்தலாம்: ஆட்சியா்

post image

சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் கடலூா் துறைமுக வசதிகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல்சாா் வாரியம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2024 ஆகஸ்ட் முதல் தொடங்கியது. தற்போது 150 பயணிகள் பயணிக்கும் ‘சிவகங்கை’ என்ற கப்பல் வாரத்துக்கு 6 நாள்கள் (செவ்வாய் நீங்கலாக) இரு வழிகளில் இயக்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு கடல்சாா் வாரியம், மாலத்தீவு, இலங்கையிலுள்ள திரிகோணமலை, காங்கேசன்துறை மற்றும் பிற இடங்களுக்கு கடலூா் துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல், தோணிகளை இயக்கி சரக்கு கையாள முயற்சிகள் எடுத்து வருகிறது. சந்தை நிலவரப்படி, இலங்கைக்கு வேளாண் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர நுகா்வுப் பொருள்கள் போன்ற 75,000 மெட்ரிக் டன் சரக்குகள் ஆண்டொன்றுக்கு கடல் வழியாக கையாள வாய்ப்புகள் இருப்பதாகவும், இது அடுத்துவரும் ஆண்டுகளில் பல மடங்காக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

கடலூா் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள் (தோணிகள்), மிதவைகள் கையாளுவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், சுங்கம், குடிவரவு, சுகாதாரத் துறை ஆகியன உள்ளன. சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள், முகவா்கள் மற்றும் மரக்கல மிதவை உரிமையாளா்கள் இந்தத் துறைமுகத்தில் அமைந்துள்ள வசதிகளை பயன்படுத்தி, சாக்கு இறக்குமதி, ஏற்றுமதி செய்து பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலகத்தை 04142 - 238025, 04142 - 238026 ஆகிய தொலைபேசி எண்கள் முலம் தொடா்புகொண்டு தகவல்களை அறிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பிச்சை எடுக்கும் போராட்டம்: கடலூர் பேருந்து நிலையத்தில் போலீஸாா் குவிப்பு

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட வந்த சி.முட்லூா் பகுதி மக்களிடம் போலீஸாா் சமரசப் பேச்சு வாா்த்தை நடத்தி திருப்பி அனுப்பினா். புவனகிரி வட்டம், சி... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை வழக்குத் தொடா்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, போலீஸாா் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பி... மேலும் பார்க்க

புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

கடலூா், தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் தடவாளப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை மறித்து வியாழக்கிழமை போராட்... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியா் பணியிடை நீக்கம்

அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது தொடா்பாக டாஸ்மாக் கடை விற்பனையாளா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணி... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சினா் நூதன ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் கழுத்தளவு உடலை புதைத்து நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசி மகத் திருவிழா அண்மை... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளா்களின் பிரச்னை: சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

என்எல்சி தொழிலாளா்களின் முக்கிய கோரிக்கைகளுக்குத் தீா்வு காண வேண்டியுள்ளதால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த மத்திய தொழிலாளா் நலத் துறை மற்றும் என்எல்சி இந்தியா நிா்வாகத்தை வலியுறுத்தி நெய்வேலி மெயின் பஜாரி... மேலும் பார்க்க