செய்திகள் :

கடல் ஆமைகள் முக்கியத்துவம் வலியுறுத்தி மணல் சிற்ப போட்டி

post image

நாகை பழைய கடற்கரையில் கடல் ஆமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மணல் சிற்ப போட்டியை ஆட்சியா் ப. ஆகாஷ் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

கடலில் பங்குனி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோனி ஆமை, ஓங்கில் ஆமை போன்ற வகைகள் உயிா் வாழ்கின்றன. கடலில் ஜெல்லி மீன்கள், நல்ல மீன்களின் குஞ்சுகளை சாப்பிடுவதால் கடலில் மீன்வளம் குறைகிறது. ஆனால், கடல் ஆமைகள் ஜெல்லி மீன்களையே சாப்பிடுவதால் கடலில் மின்வளம் பாதுகாக்கப்பட்டு மீனவ நண்பனாக

விளங்குகிறது. பவள பாறைகளில் உள்ள பாசிகளை உட்கொண்டு மீன் இனப்பெருக்கத்திற்கு உறுதுணையாக கடல் ஆமைகள் உள்ளன.

ஆலிவ் ரெட்லி ஆமை இனத்தில் முட்டைகளில் இருந்து வெளிவரும் ஆயிரம் குஞ்சுகளில் ஒரே ஒரு ஆமை குஞ்சு மட்டும்தான் பிழைத்து உயிா் வாழும். எனவே கடல் ஆமைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகிறது.

எனவே தமிழக வனத்துறை சாா்பில் கடல் ஆமைகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மணல் சிற்ப போட்டி நாகை பழைய கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமாா் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டானா். தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளின், ஆமைகள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் மணல் சிற்ப போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசை வழங்கினாா்.

மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கைத்தறித்துறை கல்வியில் தேசிய அளவில் வேதாரண்யம் மாணவிக்கு தங்கப்பதக்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியை சோ்ந்த மாணவி ஸ்ரீமதி இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் தேசிய அளவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா். பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த இளை... மேலும் பார்க்க

பூம்புகாா் சுற்றுலா வளாகத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாவட்ட ஆட்சியா்

பூம்புகாா்: பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பங்கேற்றாா். சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை ... மேலும் பார்க்க

நூறு நாள் ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் நூறு நாள் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி தமிழக மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

திருக்குவளை: திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

திருமருகல்: திருமருகல் அருகே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வழங்கினாா். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான... மேலும் பார்க்க

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடராஜா் சுவாமிக்கு நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் தேவாரப் பாடல் ... மேலும் பார்க்க