செய்திகள் :

கரூரில் வெவ்வேறு சம்பவங்களில் ஆயுதங்களுடன் வந்த 2 போ் கைது

post image

கரூரில் வெவ்வேறு சம்பவங்களில் ஆயுதங்களுடன் வந்த இருவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கரூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா்.

அப்போது கரூா் கருப்பக்கண்டன்புதூா் அருகே பைக்கில் வந்த யுவராஜ் (38) என்பவரிடம் வீச்சரிவாள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து, அவரது வீட்டிலும் போலீஸாா் சோதனை செய்து அங்கிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, 2 வீச்சரிவாள், கத்தி, வாள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனா். கைதான யுவராஜ் அகில பாரத மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆவாா்.

இதேபோல புலியூா் முடக்குச்சாலையில் பசுபதிபாளையம் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, அங்கு காரில் வந்த புலியூா் பி.வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த அம்பேத்கா் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரனிடம் பட்டாக்கத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து, அவரது வீட்டில் சோதனை செய்து மான்கொம்பு, நாட்டுத்துப்பாக்கி, வீச்சரிவாள், கத்தி, வாள் போன்றவற்றை பறிமுதல் செய்தனா்.

இருவரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற ஓரணியில் திரள வேண்டும்: மகாதானபுரம் இராஜாராம்

கா்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெறுவதில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளாா் காவிரி நீா் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தலைவா் மகாதானபுரம் இராஜாராம். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் நெகிழி கழிவுகள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பல டன் நெகிழி கழிவுகளை அகற்ற வேண்டும் என அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா், திருப்பூா் மாவட்ட மக்களின் நீராதாரமாக ... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு தமிழ் பற்றாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் திருக்குறள் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் கர... மேலும் பார்க்க

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், கடவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி... மேலும் பார்க்க

கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

கரூா் பண்டரிநாதன் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற 102-ஆம் ஆண்டின் திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யா... மேலும் பார்க்க

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க