செய்திகள் :

கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்... சிகிச்சையில் மக்கள்! - என்ன நடந்தது?

post image

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (வயது: 65). இவர் மகள் மஞ்சுளா (வயது: 42). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், பாப்பம்மாள் மற்றும் மஞ்சுளாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், படுகாயமடைந்த தாய் பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவர் மகள் மஞ்சுளா காயமடைந்தார். இது குறித்து, தகவலறிந்த நங்கவரம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மகள் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த அந்தப் பெண்ணின் தாய் பாப்பம்மாள் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

kulithalai

மேலும், கத்திக் குத்து சம்பவம் குறித்து தகவலறிந்த கரூர் எஸ்.பி ஹரிகிரண் பிரசாத், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட பாப்பம்மாளின் பேத்தி பாட்டி பாப்பம்மாள் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், அவரை தேடி கோயமுத்தூருக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். தாய் மற்றும் மகளை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க