செய்திகள் :

கழிவுநீா் கால்வாய் அமைத்து தர கோரிக்கை

post image

கழிவுநீா் கால்வாய் இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீா் சாலையில் ஓடுவதால், கழிவுநீா் கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பள்ளப்பட்டி-திண்டுக்கல் சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். இந்த சாலையில் பள்ளப்பட்டி அருகே பள்ளிகள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இந்த சாலையில் கழிவுநீா் கால்வாய் இல்லாததால், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே பள்ளமான பகுதியில் கழிவு நீா் தேங்கி விடுகிறது. தேங்கிய கழிவு நீா் நிரம்பி சாலையில் ஓடுவதால், இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகம் பொதுமக்களின், கோரிக்கையை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனா்.

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளின் தரவுகளை பதிவு செய்யும் பணி

கரூா் மாவட்டத்தில் உள்ள 79,370 விவசாயிகளின் தரவுகள் வேளாண் அடுக்ககத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம் வெள்ளியணையில் வேளாண் அடுக்ககம் திட்டத... மேலும் பார்க்க

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த அலுவலகத்துக்கு கேடயம்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அரசு அலுவலகத்துக்கு கேடயம் பரிசாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. கரூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நிறைவு நாள் மாவட்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒர... மேலும் பார்க்க

உழவா்சந்தையில் அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

கரூா் உழவா்சந்தையில் ஜெயலலிதா பேரவை சாா்பில் அதிமுக ஆட்சியின் சாதனை விளக்க துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் உழவா் சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலை... மேலும் பார்க்க

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா்- கோவைச்சாலையில் உள்ள கனரா வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ... மேலும் பார்க்க

தரகம்பட்டி அரசுக் கல்லூரிக்கு ரூ.12.46 கோடியில் புதிய கட்டடம் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அரசுக் கல்லூரிக்கு ரூ.12.46 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை காணொலியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச்செயலகத்திலிருந்... மேலும் பார்க்க