செய்திகள் :

``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி

post image

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியானப் பிறகு காங்கிரஸில் உள்ள பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

எம்.பி ஜோதிமணியும், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தனர்.

செல்வப்பெருந்தகை - கிரிஷ் சோடங்கர்
செல்வப்பெருந்தகை - கிரிஷ் சோடங்கர்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, "காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல், தொண்டர்கள் மத்தியிலும், கட்சியில் உள்ள தலைவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் யாருக்கு சீட் கொடுத்தார்கள், யாருக்கு கொடுக்கவில்லை என்பது பிரச்னை கிடையாது. பிரச்னை என்னவென்றால் 25, 30 சீட்டுகள் மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் இந்த மாதிரி பிரச்னைகள் வரத்தான் செய்யும்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுக்காலமாக இது போன்ற பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. இப்போது யாரெல்லாம் அதிருப்தி தெரிவிக்கிறார்களோ இதே கதை தான் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இதற்கு தீர்வு என்னவென்றால் சீட்டுகளை அதிகமாக்குவது தான். காங்கிரஸ் மிகப்பெரிய ஒரு பேரியக்கம். அதனால் காங்கிரஸிற்கு தேவையான சீட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசியலைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி காங்கிரஸிற்கும், பாஜகவுக்கு கொடுத்த அளவிலான சீட்டுகளைக் கொடுக்க முடியும்.

பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தி

காமராஜர் ஆட்சியை தான் மக்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸின் மதிப்பு தமிழ்நாட்டில் அதிகம். காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை. ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்தாங்க.. இன்னொரு பக்கம் கல்யாண விருந்து வைத்தே கூப்பிட்டாங்க. ஆனால் தலைமையின் முடிவு இது.

பல காரணங்களுக்காக இதற்கு ஒப்புக்கொண்டோம். பாஜகவிற்கு எப்போதும் தமிழகத்தில் இடம் கொடுக்கவே கூடாது. அதற்கு தான் இந்தத் தேர்தல்" என்று பேசியிருக்கிறார்.

சாத்தான்குளம்: ``மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." - ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

`மனைவிக்கு இரண்டு பாஸ்போர்ட்? அமெரிக்கா, துபாயில் சொத்து' - ஹிமந்தா பிஸ்வாவைச் சுற்றும் சர்ச்சை!

அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலும் மே-4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்ற... மேலும் பார்க்க

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு ... மேலும் பார்க்க

பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: தமிழ்நாட்டில் முகாமிட்ட பாஜக-வின் முக்கியப் புள்ளிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்கள் இன்று மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்... மேலும் பார்க்க

கோவை தெற்கு: ``எத்தனைப் பேர் வந்தாலும்..." - வேட்புமனு தாக்கலுக்குப் பின் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டின் முதலமை... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர் தங்கம் தென்னரசு' - மு.க.ஸ்டாலின்

விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக மற... மேலும் பார்க்க