செய்திகள் :

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானார்: பா.சிதம்பரம் இரங்கல்

post image

காரைக்குடி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுந்தரம் (1996-2001, 2006-2011) கடந்த சில மாதங்களாகவே உடல்நலமில்லாமல் இருந்தார். இந்த நிலையில், சுந்தரம் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவரின் எக்ஸ் பதிவில், ``மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு N சுந்தரம் அவர்கள் சற்று நேரத்திற்கு முன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

நான் கடந்த இரண்டு நாட்களாகத் தொகுதியில் இருந்தேன். இன்று காலை புறப்பட்டு பகல் 2 மணிக்கு டில்லி வந்தேன். இந்த துயரச் செய்தி 3 மணிக்குக் கிடைத்தது.

நம்முடைய கட்சித் தோழர்களை உடனடியாகச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் சொல்ல வேண்டியுள்ளேன். திரு சுந்தரம் என்னுடைய 35 ஆண்டு காலத் தோழர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். உடல் நலம் குன்றியதன் காரணமாகச் சில காலமாக ஓய்வில் இருந்தார். உடல் நலம் சீரடைந்து கட்சிப் பணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். அவர் மறைவு அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க