செய்திகள் :

காட்பாடி: துரைமுருகனுக்குப் பெரும் பின்னடைவு - 30 ஆண்டுகளுக்குப் பிறகு மலருகிறதா இரட்டை இலை?

post image

வேலூர் மாவட்டத்தில், பெருநகரையும் பின்தங்கிய கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதி காட்பாடி. இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். கட்சியின் சீனியரான இவர், 1971-லிருந்து 2021 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், காட்பாடியில் எட்டு முறையும், ராணிப்பேட்டையில் இரு முறையும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தடுமாறி வெற்றிபெற்றார் துரைமுருகன். அப்போது அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட வி.ராமுவே, இந்த முறையும் துரைமுருகனுக்குச் சவால் விடுக்கும் விதமாகக் களமிறங்கியதால், காட்பாடி களம் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருக்குமரன் ஆகியோரும் பிரசாரக் களத்தில் தீவிரம் காட்டினார்கள்.

துரைமுருகன்

இந்த நிலையில், இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கையில் துரைமுருகன் தொடர்ந்து பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். முதல் சுற்றிலேயே அ.தி.மு.க வேட்பாளர் வி.ராமு 3,831 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். துரைமுருகன் 2,657 வாக்குகளும், த.வெ.க வேட்பாளர் சுதாகர் 2,453 வாக்குகளும் பெற்றார்கள். மதியம் 12.30 நிலவரப்படி, 5-வது சுற்று முடிவிலும் அ.தி.மு.க-வே முன்னிலை வகிக்கிறது. அ.தி.மு.க-வின் ராமு 19,514 வாக்குகளும், தி.மு.க-வின் துரைமுருகன் 13,694 வாக்குகளும், த.வெ.க-வின் சுதாகர் 12,866 வாக்குகளும் பெற்றிருந்தார்கள்.

எனவே, துரைமுருகனை விட 5,820 வாக்குகள் கூடுதலாக பெற்று வி.ராமு வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். 1996-ல் இருந்து தற்போதுவரை காட்பாடி தொகுதியை `தொடர்ந்து’ தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் துரைமுருகன். அதற்கு முந்தைய 1991 தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இப்போது களம் அவருக்குச் சாதகமாக தெரியவில்லை. ஒருவேளை அ.தி.மு.க வெற்றிபெற்றால், காட்பாடி தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலை மலரும். தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், தேர்தல் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க