செய்திகள் :

காரில் லேசாக உரசிய பைக்; போலீஸ்காரரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த பைக் கும்பல்; பின்னணி என்ன?

post image

நாக்பூரில் பைக்குகளில் வந்த கும்பல் ஒன்று போலீஸ்காரரின் காரை வழிமறித்து, அவரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, அது சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. காரில் லேசாக உரசியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அந்தக் கும்பல் பணியில் இருந்த போலீஸ்காரரைத் தாக்கி, அவரது காரையும் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 14 பேரைக் கைது செய்துள்ளனர். ஆரம்பக் கட்ட விசாரணையில் 35 வயதான அந்தப் போலீஸ்காரர் தனது பெண் தோழி ஒருவருடன் தனது சொந்த காரில் நாக்பூரின் மங்கப்பூர் சௌக் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் ஏழு முதல் எட்டு இளைஞர்கள் அவரது காரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தங்களது பைக்குகளை காரின் முன்னால் நிறுத்தி, அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி, பின்னர் வாகனத்தை அடித்து நொறுக்கி, காரில் இருந்த போலீஸ்காரரை வெளியில் இழுத்து நடுரோட்டில் வைத்து அடித்து தாக்கினர்.

பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. படுகாயமடைந்த அந்தப் போலீஸ்காரர், உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், போலீஸ் விசாரணையைத் தொடங்கியது. சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், போலீஸார் 14 குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹர்ஷ் பவார், கௌரவ் திர்டே, சன்யம் கணேஷ்புரி, யாஸ் பிரதேகி, சத்யம் ஷிர்கே, பிரேம்ராஜ் தாகடே, ஆகாஷ் போகடே, நிதின் கோகலே, விக்கி தெல்காரே, பூமி தேவ் என்கிற சாகர் போக்டே, கணேஷ் உய்கே, பிரீதம் மொடேகர் மற்றும் திகாராம் பாராபத்ரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்கு உள்ளது. அவர்களிடம் இருந்து ஐந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் சுமார் ரூ. 5.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை: சிறுமி கடத்தலைத் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்; நேரில் அழைத்து பாராட்டிய DGP!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ். இவர் திருச்சியில் விவசாய வேலை முடித்துவிட்டு, தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புவதற்காகக் கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்... மேலும் பார்க்க

திருவிழா மேடையில் திடீரென மயங்கி விழுந்த நடனக் கலைஞர் உயிரிழப்பு; ரசிகர்கள் சோகம்

கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா. இவர் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடனமாடி வந்தார். இந்நிலையில், கரூர் அருகே தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க

'பணி நேரத்தில் மதுபோதை; அலுவலகத்தில் படுத்துறங்கிய அவலம்!' - துறையூர் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக (VAO) சின்னத்தம்பி பணியாற்றி வருகிறார். இவர், பணிநேரத்தில் மது போதையில் இருக்கும் ... மேலும் பார்க்க

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கு; சோனம் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

மேகாலயாவிற்கு கடந்த ஆண்டு தேனிலவு சென்றபோது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக சோனம் ரகுவன்ஷியும், அவரது காதலன் ராஜ் சிங் குஷ்வா... மேலும் பார்க்க

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட கணவர்; விபரீத முடிவெடுத்த மனைவி - திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31) இவரது மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `கோயில் புதுபிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்' - தோழியுடன் இணை ஆணையர் கைது!

தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்தின் அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது தோழி கிரிஜா. ஜோதிலட்சுமி கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம், கோயில் ... மேலும் பார்க்க