செய்திகள் :

`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' - தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி

post image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார்.

இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர்.

சென்னையில் பியூஸ் கோயல்...
சென்னையில் பியூஸ் கோயல்...

இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் சென்னை அதிமுக அலுவலகத்தில் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

9 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவகலத்திற்கு வந்திருக்கிறார்.

தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக அலுவலகத்தில் தினகரன்....
அதிமுக அலுவலகத்தில் தினகரன்....

டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார்

தொகுதி பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, " பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

நாங்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஸ்டாலினின் வாடிக்கையாக இருக்கிறது.

கருத்துக்களை பரிமாறவே டெல்லி செல்கிறோம். நாங்கள் டெல்லி செல்வதை விமர்சிக்கிறார்கள். அப்படி என்றால் கனிமொழி எதற்கு டெல்லி சென்றார்?

அதிமுக அலுவலகத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இது உணர்வுபூர்வமான கூட்டணி. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம். திமுக கூட்டணியில் 20 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

எங்கள் கூட்டணியில் காலையில் வந்தார்கள். மலையில் தொகுதி பங்கீடை அறிவித்துவிட்டோம். எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி. 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்க... மேலும் பார்க்க

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்க... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட... மேலும் பார்க்க

"ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச்.23) ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இதுவரைக்கும் ஊழல் ... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க