செய்திகள் :

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

post image

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு பாலஸ்தீனர்கள் பலியானார்கள்.

மேலும் பலர் காயமடைந்தனர். முன்னதாக, சனிக்கிழமை காலை காஸா நகரத்தின் சப்ரா பகுதியில் உள்ள கூடாரத்தில் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் ஐந்து பேர் பலியானதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்தது.

தம்பதி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் ஒரு கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தால் குண்டுவீசப்பட்டனர் என்று குடும்ப உறுப்பினர் ஒமர் அபு அல்-காஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அன்னையர் நாள்: முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

மேலும் இந்த தாக்குதல்கள் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டதாக குழந்தைகளின் தாத்தா கூறினார்.

அதே நேரத்தில், காஸா நகரின் துஃபா பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஆறு பேர் பலியாகினர். இத்துடன் கடந்த 24 மணி நேரத்தில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 23 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 124 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க