செய்திகள் :

கிருஷ்ணகிரியில் அதி நவீன ரேடார் தொழிற்சாலை; விரைவில் உற்பத்தியை தொடங்கும் இஸ்ரேல் நிறுவனம்!

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேடார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதன் மூலம், இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளின் பாதுகாப்புக்கான ரேடார்களை இஸ்ரேல் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

இந்தியா - இஸ்ரேல் உறவு

இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான 'இஸ்ரேல் ஏரோஸ் பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் ரேடார் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த மாதம் நடத்திய நிலையில், அடுத்த ஆண்டு ஆலை முழுமையாகச் செயல்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.ஏ.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் டி.சி.எக்ஸ், ஈ.எல்.டி.ஏ, நிறுவனங்களுடன் இஸ்ரேலின் ஐ.ஏ.ஐ நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தக் கூட்டு நிறுவனத்தில் ரூ.850 கோடி முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 165 பேர் நேரடியாக வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். 2027-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின் இந்த ஆலையில் ரேடார் உற்பத்தி தொடங்கப்படும்.

இந்த ஆலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு தேவைகளுக்கான ரேடார் அமைப்புகள் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி திறனையும் வலுப்படுத்தும். குறிப்பாக மேம்படுத்தபட்ட ரேடார் அமைப்புகள், விமான ரேடார்கள், தரைவழி ரேடார்கள், கண்காணிப்பு, அச்சுறுத்தல் கண்டறிதல் அமைப்புகளின் உற்பத்தியுடன் சோதனை அமைப்புகளும் இந்நிறுவனத்தில் உருவாக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

ரேடார்

இந்நிறுவனம் airடெல்லி ஐ.ஐ.டி-யுடன் சேர்ந்து ஆராய்ச்சியையும் மேற்கொண்டுள்ளதுடன், ஹைதராபாத்தில் ரேடார் அமைப்புகளுக்கான சேவை மற்றும் பராமரிப்பு மையத்தை

இனி இலவசம் இல்லையா? மாசம் ₹99! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமுக்கு வரும் 'Plus' சந்தா - META திட்டமென்ன?

மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனம்) சமீபத்தில் தனது முக்கிய செயலிகளுக்கு உலகளவில் சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வண... மேலும் பார்க்க

Telegram Ban: இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை! - பின்னணி என்ன?

ஜூன் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு சில தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெலிகிராம் செயலி மீதான தற்காலிக முடக்கத்தோடு சேர்த... மேலும் பார்க்க

ரூ.250 ஊதியம்: AI ரோபோக்களுக்காக உழைப்பை விற்கும் இந்தியர்கள்! - எதிர்கால தேவையா அல்லது ஆபத்தா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், இன்று மென்பொருள்களைத் தாண்டி, மனிதர்களைப் போல உடல்ரீதியாகச் செயல்படும் ரோபோக்களாக (Humanoid Robots) உருவெடுத்து வருகிறது. இந்த ரோபோக்களுக்கு மனிதர்கள் எப்படி வேலை... மேலும் பார்க்க

டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டாலும் கார் தானாக நிற்கும்; அனுமதி வழங்கிய அரசு... விபத்துகள் குறையுமா?!

இந்தியாவில் தானாக இயங்கும் 'டிரைவர் இல்லா கார்' மற்றும் வாகனப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கார்களில் பயன்படுத்தப்படும் ரேடார் சென்சார்கள் மற... மேலும் பார்க்க

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் - இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மெட்டா சேவைகள் பாதிப்பு!

மெட்டா நிறுவனத்தின் செயலிகளான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை, உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று முடங்கியுள்ளன. இன்று மதியம் முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் திடீரெனத் தொ... மேலும் பார்க்க

Grid Reorder: இன்ஸ்டா பயனர்கள் நீண்ட காலமாக கேட்ட வசதி! `வந்துவிட்டது' புதிய அப்டேட்! - ஏன் ஸ்பெஷல்?

இன்ஸ்டாகிராம் பயனர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் பல காலமாக கேட்டுவந்த ஒரு முக்கியமான அம்சம், இப்போது நிஜமாகியிருக்கிறது. இனி உங்கள் இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பக்கத்தை ஒரு காலவரிசைப்படி மட்டும் பா... மேலும் பார்க்க