செய்திகள் :

கிருஷ்ணகிரி: இடிந்து விழும் கூரைகள்; மழை வந்தால் குளமாகும் வீடு; பயத்துடன் வாழும் பழங்குடியினர்

post image

"இருபது ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்திடும் என்று பயத்துடன் வாழும் எங்கள் பிரச்சனையை அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள் பட்டியல் பழங்குடியரான இருளர் சமூக மக்கள்.

கூரை பெயர்ந்து விழும் வீடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை அருகில் சோக்காடி செல்லும் வழியில் வசித்து வந்த 21 இருளர் குடும்பத்தினருக்கு கடந்த 2005-ல் மத்திய மாநில அரசு இணைத்து கொண்டு வந்த திட்டத்தின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்தது.

தற்போது அந்த வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் புனரமைத்து தாருங்கள் என்று அங்கு வசிககும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

பட்டா கொடுத்த இடத்தில் குடிசை கட்டி வாழும் மக்கள்

இது சம்பந்தமாக பலமுறை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, "இருபது வருசத்துக்கு முன்னாள அரசாங்கம் கட்டி கொடுத்த வீடுதான். ஆனால், சமீபகாலமா கான்கிரீட் கூரை பெயர்ந்து கீழே விழுகிறது. அதன் உள்ளேயுள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது, மழை வந்துவிட்டால் வீட்டின் உள்ளே இருக்க முடியாது, அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. அதனால் வீட்டில் வசிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

வீட்டின் நிலை

நாங்கள் பகல் முழுதும் காடுகளுக்கு சென்று கடினமாக உழைத்து வந்தாலும் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் வந்து சாய முடியவில்லை. அதைவிட கொடுமையாக கைக் குழந்தைகள், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சீக்கிரம் சீர் செய்து தரும்படி மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை, , இந்த திட்டத்தில் மேலும் 15 வீடுகள் கட்டித்தருவதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டது, ஆனால், இதுவரை வீடு கட்டிக்கொடுக்கவில்லை, அந்த இடத்தில் ஓலை கூரை போட்டு ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது 21 வீடுகளையும் மராமத்து செய்து தரவும், பட்டா கொடுக்கப்பட்ட 15 பேருக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்" என்றனர்

மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் இவர்களின் பிரச்சனையை தீர்ப்பார்களா?

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுத... மேலும் பார்க்க

'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் வலைதளம், நிறுவனங்களின் வலைதளம், UMANG ஆப் ஆகியவை ஐந்து நாள்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யாது என்று EPFO அறிவித்துள்ளது. என்ன காரணம்? கணினி மேம்பாட்டு... மேலும் பார்க்க

கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் பின்தங்கும் இந்தியா... நிதி ஆயோக் எச்சரிக்கை, செவிசாய்க்குமா அரசு?

வேகமாக வளரும் பொருளாதாரம், டிஜிட்டல் புரட்சி, வேறெந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரும் இளைஞர் வளம் என்று நாம் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி களில்... மேலும் பார்க்க

'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா?

ஈரான் போரின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96-ஐ எல்லாம் தாண்டிச் சென்றது.ஆனால், கடந்த ஒரு வாரமாக, இந்திய ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து, ரூ.94-95-க்கு இடையே வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மிக முக... மேலும் பார்க்க

மதுபாட்டில், மோசமான உணவு: புகார்களை அடுக்கிய மாணவர்கள் - தன் போன் நம்பரை கொடுத்துச் சென்ற அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 2... மேலும் பார்க்க

"வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் வழங்க வேண்டும்"- பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு சட்ட, நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது... மேலும் பார்க்க