செய்திகள் :

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு ரொம்பவே தொந்தரவாகிவிட்டது" - சீமான்

post image

தமிழகமெங்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது.

வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். வாக்குச் செலுத்திய பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

சீமான்
சீமான்

அதில் அவர், "நமக்கு இருக்கிற கடைசி வலிமை வாக்குதான். அதை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். 75 சதவீத மக்கள் மட்டுமே வாக்களிக்கும்போது, மீதமுள்ள மக்களுக்கு என்ன பிரச்னை என்கிற கேள்வியும் இங்கு வருகிறது.

தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லையா?, இந்த ஜனநாயக நாட்டின் மீது நம்பிக்கை இல்லையா? போன்ற கேள்விகளும் வருகின்றன.

வருமான வரி கட்டாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பது மட்டும் தேசத் துரோகம் கிடையாது. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் தேசத் துரோகம், ஜனநாயகத் துரோகம்தான்.

அதை என் சொந்தங்கள் செய்யக்கூடாது. கற்றவர்கள்தான் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நான் வாக்களித்தால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் வரும். அதனால், என்னிலிருந்தும், உங்களிலிருந்தும்தான் மாற்றம் வரும்.

சீமான்
சீமான்

நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். அது நம் பொறுப்பும் கடமையும்" என்றவர், நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் பேருந்தின்றி அவதிப்பட்டது பற்றி, "அது நம் நாட்டில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடு. மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கிறது.

அங்கு நாம் பறப்பதற்கே விமானங்கள் இல்லை. ஆனால், 5000 ஏக்கரில் புதியதாக விமான நிலையம் கட்டப்போகிறேன் என்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வசதி குறைவாக இருந்தது என எவரும் வீதிக்கு வந்து நிற்கவில்லை.

ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து வெகு தூரம் செல்ல வேண்டும். இது கொடுமை. இது பேராசை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு ரொம்பவே தொந்தரவாகிவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு தேர்தலை நடத்தும் முதல் பெண் தலைமை அதிகாரி; யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று... மேலும் பார்க்க

போதுமான ரயில், பேருந்து இல்லாமல் அவதிப்பட்ட மக்கள்; ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்; பயணியின் அனுபவம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கிறது. அதே நேரம், வாக்குரிமையை நிறைவேற்ற தயாரான பெரும் திரளான மக்கள் கூட்டம் நேற்று இரவிலிருந்து அல்லோலப்பட்டு இருக்கிறது. போதுமா... மேலும் பார்க்க

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் - ஓர் ஆழமான அலசல்!

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் ஒரு 'சாதி, மதமற்றவர்' என அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் இத... மேலும் பார்க்க

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' - RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக... ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன. இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்க... மேலும் பார்க்க

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க