செய்திகள் :

குமரி மாவட்டம்: `தாமரை'யை மூன்றாம் இடத்துக்கு தூக்கிப்போட்ட தவெக! - அதிருப்திக்கு காரணம் தான் என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டை என்பது இந்த தேர்தலில் நொறுங்கிப்போயுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க இடையேதான் நேரடி போட்டி நிலவும். காங்கிரஸ் கூட்டணிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் சிறுபான்மையினர் வாக்குகளையும், பா.ஜ.க பெரும்பாலான இந்து வாக்குகளையும் பெற்று வந்தன.

இதனால் காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கும் நேரடி மோதல் ஏற்படும். பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணி வெல்வதும், பா.ஜ.க இரண்டாம் இடத்தில் வந்து கெத்தாக நிற்பதையும் பார்க்க முடியும்.

இந்த சட்டசபை தேர்தலிலும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், த.வெ.க அலை கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரையை மூன்றாம் இடத்துக்கு தூக்கிப்போட்டுவிட்டது.

தவெக தலைவர் விஜய்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க போட்டியிட்டது.

நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்திலும், கிள்ளியூர் தொகுதியில் த.மா.க வேட்பாளர் தாமரைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி என முக்கிய வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கூட்டணி வாக்குகளை த.வெ.க, நா.த.க கட்சிகள் பிரிந்தால் எளிதில் வென்றுவிடலாம் என கணக்குப்போட்டனர் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள். ஆனால், தாமரைச் சின்னம் போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வென்றனர்.

தி.மு.க கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து த.வெ.க வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். அதிலும், கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் த.வெ.க வாக்குகள் மிரட்டலை கொடுத்தன. தாமரைச் சின்னம் குமரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

எம்.ஆர்.காந்தி

மத ரீதியிலான அரசியல் காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுத்துள்ளது. ஆனால், பா.ஜ.க-வை கைவிட்டுவிட்டது. அதற்கு தலைமையில் இருந்து வந்த ஸ்வீட் பாக்ஸால் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம் என்கிறார்கள். கிள்ளியூர் தொகுதி தவிர மற்ற 4 தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு சுமார் 20 ஸ்வீட் பாக்ஸ் வந்துள்ளதாம்.

அது சில இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பகுதிகளில் நிர்வாகிகள் பணத்தை அமுக்கி விட்டார்களாம். தேர்தல் சமயத்தில் பா.ஜ.க ஆதரவளர்கள் தனது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்து வெளிப்படுத்தவும் செய்திருந்தனர்.

இது மாவட்டம் முழுவதும் பேசுபொருளானது. எனவே, பா.ஜ.க வலுவாக உள்ள இடங்களிலும் த.வெ.க-வுக்கு வாக்குகள் சென்றுள்ளன. தொண்டர்களையும், கொள்கைகளையும் நம்பாமல், பா.ஜ.க களமாடியதால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டதன் விளைவு மூன்றாம் இடத்துக்கு தூக்கி எறியப்பட்டதாக கூறுகின்றனர் அக்கட்சியினர்.

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க