செய்திகள் :

கும்பகோணம்: `மக்கள் புறக்கணித்ததால் இனி அங்கு அமரப் போவதில்லை' - திமுக துணை மேயர்!

post image

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், மாமன்ற கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மேயர் சவரணன் தலைமையில் நடந்தது. தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்ட அரங்கில், முதல்வர் விஜய் போட்டோ மட்டுமே இருந்தது. கூட்டத்திற்கு முன்னதாக, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்களின் இருக்கைக்கு முன் இருந்த மேசையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைத்தப்படி கூடத்தில் கலந்துக்கொண்டனர். இதனால் அரங்கத்தில் அதிக அளவில் ஸ்டாலின் போட்டோக்கள் இருந்தன.

மேயர் சரவணன்

இதையடுத்து, கூட்டம் தொடங்கியதும், மண்டல குழு தலைவரும், திமுக கவுன்சிலருமான அசோக்குமார், ஆதரவாளர்களுடன், `எங்கள் தலைவர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியே தீருவோம்' என மேடைக்குச் சென்று, ஆணி அடித்து மாட்டினார். இதைத் தொடர்ந்து, மேலும் சில திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டோவையும், அதிமுக கவுன்சிலர் குமரேசன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டோவையும், காங்கிரஸ் கவுன்சிலர் ஐயப்பன் முன்னாள் முதல்வர் காமராஜர் போட்டோவையும் மேடையில் மாட்டினர். பிறகு, ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் தலைவர்களின் பெயரை சொல்லி கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மேயர் சரவணன், `எல்லோர் போட்டோக்களும் இருக்கும் போது, எல்லா அரசு அலுவலகங்களிலும் இருக்க வேண்டிய காந்தி படம் இதில் இல்லை. காந்தி படத்தை மாட்டுங்கள்' என அலுவலர்களிடம் கூறிய நிலையில், காந்தி போட்டோவும் மாட்டப்பட்டன. திமுக-வை சேர்ந்த துணை மேயர் தமிழழகன், மேடையில் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் கவுன்சிலர்களுடன் அமர்ந்திருந்தார்.

துணை மேயர் தமிழழகன்

மேயர் சரவணன் அவரை மேடைக்கு அழைத்தபோது, "சட்டமன்ற தேர்தலில், நாங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். இந்த புறக்கணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து அரசு காரைப் பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்து அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். அதேபோல், துணை மேயருக்கான இருக்கையிலும் இனி அமரப்போவதில்லை" என்றார்.

`தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற முதலீடுகள்' பட்டியலிட்ட கீர்த்தனா; ஏன் சென்றன? - TRB ராஜா விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் சென்ற முதலீடுகள் எ... மேலும் பார்க்க

CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' - ஓர் விரிவான அலசல்!

தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய்யும் அவையில் பதிலளித்து முடித்திருக்கிறார். தவெக அரசு அமைந்து 40 நாட்களை நிறைவு செய்திருக்... மேலும் பார்க்க

`மாணவர்கள்மீது கழிவுநீர் பீய்ச்சியடிப்பு' - பினராயி கண்டனம்; சுடிதார் நிறம் மாறியதாக CPM புகார்

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ கல்வித்திட்டத்தில் நிபந்தனைகளுடன் இணைவதாக கேரள மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான சி.பி.எம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளம்... மேலும் பார்க்க

'ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியில் 'இத்தனை' பேரல் எண்ணெய்!' - ட்ரம்ப் உற்சாகம்

அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது... ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிட்டது என்கிற நிலையில்தான், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசாணை வெளியிட்ட தமிழக அரசு - எப்போது தொடங்குகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அரசாண... மேலும் பார்க்க

மேகதாது: `புதிய நடுவர் மன்றம்... தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும்' - எச்சரிக்கும் சீமான்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், சட்டசபையில் கடந்த 19ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத... மேலும் பார்க்க