`மாணவர்கள்மீது கழிவுநீர் பீய்ச்சியடிப்பு' - பினராயி கண்டனம்; சுடிதார் நிறம் மாறி...
'ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியில் 'இத்தனை' பேரல் எண்ணெய்!' - ட்ரம்ப் உற்சாகம்
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது... ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிட்டது என்கிற நிலையில்தான், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் மூடியது ஈரான்.
இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சும் இடம்பெற்று வருகிறது.

இந்த நேரத்தில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 19 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மளமளவெனக் குறைந்து வருகிறது.
அதோடு உலகமும் இப்போது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியிருக்கிறது!!!" என்று பதிவிட்டுள்ளார்.















