செய்திகள் :

கோரிக்கை விடுத்த ராமநாதபுரம் ஆட்சியர்; ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல் துணை ஆய்வாளர்!

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேல்நிலை கல்வியை முடித்து பொருளாதார வசதி  காரணமாக உயர் கல்வியில் சேர முடியாத மாணவ மாணவிகளுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்ற ராமநாதபுரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு துணை ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன், மாணவ மாணவிகளின் கல்வி உதவிக்காக ருபாய் ஒரு லட்சத்தினை மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடையாக வழங்கினார்.

நிதி உதவி வழங்கிய துணை ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன்

நன்கொடையாக வழங்கப்பட்ட அந்த தொகையினை பெற்றோர் இருவரையும் இழந்த 2 மாணவர்கள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 4 மாணவர்களின் உயர்கல்வி பெற உதவிடும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பொருளாதார வசதியில்லா மாணவ மாணவிகளின் உயர் கல்விக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கிய காவல் சிறப்பு துணை ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசனுக்கு, மாவட்ட  ஆட்சியர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி ஆகியோர் உடனிருந்தனர்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை - கல்விக்குக் கரம்கொடுக்கும் வடிவேல் கிராக்கர்ஸ்!

1945 இல் துவங்கப்பட்ட சிவகாசியின் மிக பிரபலமான பட்டாசு நிறுவனமான வடிவேல் கிராக்கர்ஸ் ( vadivel crackers ) இல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவத்தின் மூலம் ... மேலும் பார்க்க

கடினமான Physics வினாத்தாள், காத்திருந்த மோடி, மீண்டும் வினாத்தாள் கசிவு? - நீட் மறுதேர்வு நிகழ்வுகள்

நேற்று (ஜூன் 21, 2026) நீட் மறுதேர்வு நடைபெற்றது. தேர்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...> நேற்று நடந்த நீட் மறுதேர்வில் கிட்டத்தட்ட 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். ஆனால... மேலும் பார்க்க

நீட் மறுதேர்வு: கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்! | Photo Album

புதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் ... மேலும் பார்க்க

இன்று நீட் மறுதேர்வு: 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; தர்மேந்திர பிரதான் வாழ்த்து!

கடந்த மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், டெலிகிராமில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால், மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) நீட... மேலும் பார்க்க