செய்திகள் :

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

post image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் சுனி என்ற சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகிய ஆறு பேருக்கும் தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது, எர்ணாகுளம் பிரின்சிபல் செசன்ஸ் கோர்ட். இதற்கிடையில் சிறைக்குச் செல்லும் முன் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக பெயரைக்கூறி வீடியோ வெளியிட்டார் இரண்டாவது குற்றவாளியான மார்ட்டின் ஆண்டனி. பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை, அது கட்டுக்கதை என அந்த வீடியோவில் கூறியிருந்தார். விய்யூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மார்ட்டின் ஆண்டனி மீது திருச்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை மன வருத்ததுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

சுனில்குமார் என்ற பல்சர் சுனி

இந்த நிலையில் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக மார்ட்டின் ஆண்டனி வெளியிட்ட வீடியோக்களை பணம் வாங்கிக்கொண்டு பகிர்ந்ததாக மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சமூக வலைதங்கள் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்களில் அந்த வீடியோக்களை மூவரும்  பகிர்ந்ததாகவும் அந்த வீடியோக்களை நீக்கம் செய்துள்ளதாகவும் திருச்சூர் சிட்டி போலீஸ் கமிஷனர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கூட்டு பாலியல் வன்முறை

இந்த நிலையில் நடிகை பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி பரிந்துரை செய்துள்ளார். டி.ஜி.பி பரிந்துரையை அரசு அங்கீகரித்துள்ளது. நடிகைக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் தோல்வியடைந்ததாக கூறப்பட்ட நிலையில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க