செய்திகள் :

'கேரள முதல்வர்' என்பதை ஃபேஸ்புக் பயோவில் இருந்து நீக்கிய பினராயி விஜயன்! - விவாதமும், விளக்கமும்!

post image

கேரள மாநில முதல்வராக 2016-ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் இருந்து வருகிறார். 2016 தேர்தலில் சி.பி.எம் கூட்டணி பெரும்பான்மையுடன் கேரளத்தில் ஆட்சியை பிடித்தது. முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்றார். அதுபோன்று 2021 சட்டசபை தேர்தலில் கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வென்று பினராயி விஜயன் 2.0 ஆட்சி அமைத்தார்.

இந்த நிலையில் கேரளத்தில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சி.பி.எம் மீண்டும் ஆட்சியை பிடித்து பினராயி விஜயன் 3.0 ஆட்சி அமைப்போம் என அக்கட்சி நிர்வாகிகள் கூறி வந்தனர். அதே சமயம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கடந்த 29-ம் தேதி வெளியான எக்ஸிட் போல் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பினராயி விஜயன்

எக்ஸிட் போல் கணிப்புகள் பொய்த்துபோகும் என சி.பி.எம் தலைவர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில் தனது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பயோவில் 'கேரள முதலமைச்சர்' என்பதை நீக்கிவிட்டு 'பொலிட் பீரோ உறுப்பினர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்சிஸ்ட்)' என மாற்றியுள்ளார் பினராயி விஜயன்.

நேற்று (மே 3) இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தோல்வி ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் முதல்வர் தனது பயோவில் திருத்தம் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஃபேஸ்புக் பக்கத்தில் கட்சி பதவியை மட்டும் குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன்

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ள சி.பி.எம் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, "தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மார்ச் 16-ம் தேதியே முதல்வர் பினராயி விஜயன் தனது பயோவில் பொலிட்பீரோ உறுப்பினர் என மாற்றம் செய்துவிட்டார். தேர்தல் நடைமுறை விதிகள் அமலானதும் இந்த மாற்றத்தை செய்துவிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பயந்து இப்போது முதலமைச்சர் என்ற பயோவை திருத்தி கட்சி பதவியை மட்டும் குறிப்பிட்டுள்ளதாக கூறுவது தவறான தகவல்" என்றார்.

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க