செய்திகள் :

கே.வி.குப்பம்: முதலிடத்தில் தவெக; ஜெகன்மூர்த்தி கலக்கம் - உதயசூரியனையும் ஓரங்கட்டிய `விசில்’

post image

வேலூர் மாவட்டத்திலுள்ள கீழ்வைத்தினான்குப்பம் எனும் கே.வி.குப்பம் தனித்தொகுதியில் தி.மு.க சார்பாக ராஜேஸ்வரி, அ.தி.மு.க கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தி, நா.த.க-வில் கலையேந்திரி, த.வெ.க-வில் தென்றல் குமார் களமிறங்கியுள்ளனர். கடந்த முறைபோல, மாம்பழத்தின் துணையோடு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டதால் `மீண்டும் வெற்றி’ எனக் கணக்குப் போட்டு தெம்போடு இருந்தார் ஜெகன்மூர்த்தி.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி அவருக்கு அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றில் இருந்தே த.வெ.க வேட்பாளர் தென்றல் குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

பூவை ஜெகன்மூர்த்தி

மதியம் நிலவரப்படி, 10 சுற்றுகள் முடிவிலும் த.வெ.க-வே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 10-வது சுற்று முடிவில், த.வெ.க வேட்பாளர் தென்றல் குமார் 39,666 வாக்குகள் பெற்றுள்ளார். தி.மு.க வேட்பாளர் ராஜேஸ்வரி 28,230 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நகர்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகன்மூர்த்தி 25,488 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் தோல்வியை நோக்கி நகர்வது, அவரின் ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

த.வெ.க வேட்பாளருக்கும் ஜெகன்மூர்த்திக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 14,178. அதேசமயம், அடுத்தடுத்த சுற்றுகளிலும் வாக்கு சதவிகிதம் அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடாத காரணத்தினால் கலக்கத்தில் இருக்கிறார் ஜெகன்மூர்த்தி.

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க