செய்திகள் :

கோவை: `இப்போது வந்தவர்களுக்கெல்லாம் எம்.எல்.ஏ சீட்!'- ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய காங்கிரஸார்

post image

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவன் முன்பு சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதில் சிங்காநல்லூர் தொகுதிக்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி என்பவருக்கும், கவுண்டம்பாளையத்திற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சூரிய பிரகாஷ் என்பவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜ் பவன் முன்பு கூடிய அக்கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள் இருவரையும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ``கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்பதை டெல்லியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

இந்த வேட்பாளர்கள் இருவரும் கட்சிக்கு வந்து 2 வருடம் மட்டுமே ஆகிறது. 25 முதல் 40 ஆண்டுகளாக இந்த கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டெல்லிக்கும், ராகுல் காந்திக்கும் தவறான தகவலைச் சொல்லி இருக்கிறது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிங்காநல்லூர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்குப் போய்விட்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்.

சூரியபிரகாஷ் - ஸ்ரீநிதி

டெல்லிக்கு தவறான சொல்லி பணம் பெற்றுக் கொண்டு இந்தப் பட்டியல் தயாராகி இருக்கிறது. பட்டியலை தயாரித்தவர்கள் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இவர்கள் இரண்டு பேர் பெயர் இல்லை. ஆனால் திடீரென வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். சொந்த கட்சியினருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் இவர்கள் யார் என்றே தெரியாது. இந்த வேட்பாளர்களால் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும். தொண்டர்கள் மிகுந்த அதிருப்தி மற்றும் கொந்தளிப்பில் இருக்கிறோம்" என்றனர்.

'பெரம்பூரில் 52 வயது; திருச்சி கிழக்கில் 51 வயது!' - வேட்புமனுவில் குழப்பிய விஜய்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுக்களில் வெவ்வேறு வயதை விஜய் குறிப்பிட்டிருப்பது இப்போத... மேலும் பார்க்க

`மாநில காங்கிரஸ் தலைவருக்கு அக்கறையும், தெளிவும் இல்லையென்பது...' - வேட்பாளர் பட்டியல் பற்றி ஜோதிமணி

நீண்ட இழுபறிக்குப் பிறகு, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் பற்றி உள்கட்சியினரும், மாற்று கட்சியினரும் தொடர்ந்த... மேலும் பார்க்க

கேரள சி.எஸ்.ஐ நிர்வாகி விளவங்கோடு வேட்பாளராக அறிவிப்பு - பின்னணியில் கே.சி.வேணுகோபால்?

கன்னியாகுமரி மாவட்டதில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி வெற்றிபெற்றார். விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல... மேலும் பார்க்க

எல்.முருகனுக்கு அவிநாசி தொகுதி; 'வாய்ப்பு கேட்டேன்தான்; யாரும் வந்து பார்க்கவில்லை'- தனபால் குமுறல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதி தனி தொகுதி ஆகும். அந்தத் தொகுதியில் 2016, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பாக தனபால் களமிறங்கினார். களமிறங்கியது மட்டுமல்லாமல்... அந்தத் தொகு... மேலும் பார்க்க

வெளியான லிஸ்ட்; கரைசேருமா `கமலாலய' கப்பல்? - மோடி சந்திப்பும் அரண்டுகிடக்கும் தமிழக பா.ஜ.க!

இதோ, அதோ என இழுத்துக் கொண்டிருந்த தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி, இந்தத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பாததால், அவருக்கு வாய்ப்பு வ... மேலும் பார்க்க

'எளிதாக' ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுவோம் - ட்ரம்ப் லேட்டஸ்ட் பதிவு

ஈரான் போரின் எதிரொலியை விட, ஹார்முஸ் ஜலசந்தி மூடல் தான் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.இந்த ஜலசந்தி மூலம் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது. அது மூடப்பட்டிருப்பதால், கச்சா ... மேலும் பார்க்க