செய்திகள் :

கோவை: 3 மணி நேரத்தில் 12 வீடுகளில் கொள்ளை; அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை

post image

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் வசித்து வருகிறார்கள். நேற்று அங்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 12 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளை
கொள்ளை

இதுதொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிஃப் ஆகிய மூன்று பேர் காவல்துறையினரால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரின் மையப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கைது செய்யப்பட்ட 3 பேரும் குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்தனர். குனியமுத்தூர் பகுதியில் 12 பேர் வீடு எடுத்து தங்கி அலுமனிய பாத்திர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சரவணசுந்தர்
சரவணசுந்தர்

இவர்கள் 3 பேரும் துணி வியாபாரம் செய்வதாகக் கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுடன் தங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 42 பவுன் தங்க நகை, 34 கிராம் கவரிங், 500 கிராம் வெள்ளி, ரூ.1.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் 3 பேரும் அடுக்குமாடி குடியிருப்புகளைக் குறி வைத்து தேடிவந்துள்ளனர். கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக வீடுகள் இருப்பதால் அங்கு சென்றுள்ளனர். 3 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

அன்றைய தினம் முழுவதும் அவர்கள் ஆட்டோவில் பயணித்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் காவலரைத் தாக்கியதால், தற்காப்புக்காக அவர்களைச் சுட்டுப் பிடித்துள்ளோம்” என்றார்.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க