செய்திகள் :

சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா

post image

பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே சிலர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தி வெளிநாடு சென்று இருந்தபோது அவரது இடத்தில் இருந்து அவரது சகோதரி பிரியங்கா காந்திதான் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முழு அளவில் பிரியங்கா காந்தி தயார் நிலையில் வந்திருந்தார்.

அதோடு சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திலும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டதோடு பிரதமர் நரேந்திர மோடியுடனும் பேசிக்கொண்டிருந்தார்.

ராகுலுடன் பிரியங்கா

பாட்டி இந்திரா காந்தி போன்று.!

மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கேரளாவில் நிறைவேற்றப்பட இருக்கும் நெடுஞ்சாலைகள் குறித்து பிரியங்கா பேசினார். ஆனால் ராகுல் காந்தி இதுவரை சபாநாயகர் கூட்டிய தேநீர் விருந்தில் கலந்துகொண்டது கிடையாது. பிரியங்கா காந்தி அந்த நடைமுறையை மாற்றி இருப்பது பா.ஜ.கவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

பிரியங்கா காந்தி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், ''பிரியங்கா காந்திக்கு வாய்ப்பு கொடுத்தால் அவரது பாட்டி இந்திரா காந்தி போன்று வலுவான பிரதமர் என்பதை நிரூபித்துக்காட்டுவார்'' என்று குறிப்பிட்டார். பங்களாதேஷில் இந்து பிரஜை படுகொலை செய்யப்பட்டது குறித்து பேசிய இம்ரான் மசூத், `பிரியங்கா காந்தியை பிரதமராக்கிப்பாருங்கள். அவர் எப்படி பதிலடி கொடுக்கிறார் என்று தெரியும்' என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ''அரசியலில் அவருக்கு(பிரியங்கா) ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்த நாட்டில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதிலும் அவருக்கு ஒரு சிறந்த எதிர்கால பங்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். இது காலப்போக்கில் நடக்கும், இது தவிர்க்க முடியாதது என்று நான் நினைக்கிறேன். பிரியங்காவை பலரும் பிரதமராக பார்க்க விரும்புகின்றனர். பிரியங்காவை மக்கள் பாராட்டுகின்றனர். பிரியங்கா தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியிடமிருந்து அதிகம் கற்று இருப்பார் என்று நினைக்கிறேன்.

மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர் பேசும்போது, ​​மனதிலிருந்து பேசுகிறார். உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார், மேலும் அவற்றைப்பற்றி விவாதிக்கிறார்," என்று வதேரா கூறினார்.

பிரியங்கா காந்தி

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியில் மாற்றத்தை விரும்புவதாக பெயர் சொல்ல விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அத்தலைவர் மேலும் கூறுகையில்,'' பிரியங்கா காந்தியை எளிதில் அணுக முடிகிறது. ஆனால் ராகுல் காந்தியை கட்சியினரால் எளிதில் அணுக முடியவில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் சொல்வதைத்தான் ராகுல் காந்தி கேட்டு செயல்படுகிறார். ஆனால் பிரியங்கா காந்தி அனைவர் கருத்தையும் கேட்கிறார். அதோடு பிரியங்காவை பார்ப்பது மறைந்த இந்திரா காந்தியை நேரில் பார்ப்பது போன்று இருக்கிறது''என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்களின் இக்கருத்தால் ராகுல் காந்தி மீது காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது. பா.ஜ.க-வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு வேறு ஒருவர் தலைவராக வரும்போது அவரை எதிர்கொள்ளக்கூடிய வலுவான தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். எனவே பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று கட்சியில் தலைவர்கள் பலரும் நினைக்கின்றனர்.!

OPS : தனிக்கட்சி; விஜய்யுடன் கூட்டணி! - ரூட்டை மாற்றுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

'எடப்பாடி பழனிசாமி என்கிற பெயரை சொல்லவே அவமானமாக இருக்கிறது. பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையப் போவதில்லை' என தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். தம... மேலும் பார்க்க

`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்

மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகள... மேலும் பார்க்க

”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் ... மேலும் பார்க்க

போலி மருந்து விவகாரம்: பாஜக ஆதரவு முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியை தூக்கிய புதுச்சேரி போலீஸ்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகாரளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்...’புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்... மேலும் பார்க்க

Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக

விஜய்யின் பனையூர் தவெக அலுவலகத்தை அல்லோலகலப்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல். விஜய் காரின் குறுக்கே விழுந்து கட்டையை போட்டவர், ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் கேட் முன்பு அமர்ந்... மேலும் பார்க்க