செய்திகள் :

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

post image

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத் தங்கத்தைப் பயன்படுத்தி கோயிலின் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தங்கம் குறைந்திருக்கிறது. அந்த தங்கத்துக்கு பதிலாக செப்புத் தகடுகள் வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கேரள உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் முக்கிய மூளையாக செயல்பட்ட முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் அதிகாரி முராரி பாபு, 2019-ம் ஆண்டின் தேவஸ்தம் போர்டின் தலைவர் ஏ.பத்மகுமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் காட்சிப்படுத்தப்பட்டு, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. அதைத் தொடர்ந்து, தங்கத் திருட்டு தொடர்பான செய்திகள் வெளியானபோது, ​​அந்தத் தங்கத் தகடுகள் தனது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதை நடிகர் ஜெயராம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடிகர் ஜெயராமிடம் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜெயராம் இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஜெயராமன் அளித்த வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

நடிகர் ஜெயராம்

அதில், ``கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அந்தப் பயணங்களின் மூலமாகவே உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாகவே எனக்கு கோவர்தனன் அறிமுகமானார்.

சபரிமலை கருவறைக்காக புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என உன்னிகிருஷ்ணன் பொட்டி கூறினார். அதன் அடிப்படையிலேயே அந்த பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பூஜைகளிலும் நான் கலந்துகொண்டேன்." எனக் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

`400 மீட்டர் பயணத்துக்கு ரூ.18,000' - அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர்

மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இர... மேலும் பார்க்க

"பேசி சரிபண்ணிட்டேன்" - மின்சாரம் பாய்ந்து இறந்த ஐடிஐ மாணவர்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் பதில்

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: தடையை மீறி தீபமலை மீது ஏறிய பிக்பாஸ் அர்ச்சனா - வைரலான பதிவு; அபராதம் விதித்த வனத்துறை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீப மலையைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலை உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏறுவதற்கு போத... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை; சிக்கிய மூவர் - சென்னை அரசு கல்லூரி கேன்டீனில் நடந்த கொடூரம்

சென்னையில் அரசு கல்லூரி ஒன்றின் வளாகத்தில் கோட்டூரை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக கேன்டீன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை, கிஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் உட்பட 8 பேர் கைது ச... மேலும் பார்க்க

`திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள்

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மதுப... மேலும் பார்க்க