செய்திகள் :

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

post image

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத் தங்கத்தைப் பயன்படுத்தி கோயிலின் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தங்கம் குறைந்திருக்கிறது. அந்த தங்கத்துக்கு பதிலாக செப்புத் தகடுகள் வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கேரள உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் முக்கிய மூளையாக செயல்பட்ட முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் அதிகாரி முராரி பாபு, 2019-ம் ஆண்டின் தேவஸ்தம் போர்டின் தலைவர் ஏ.பத்மகுமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் காட்சிப்படுத்தப்பட்டு, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. அதைத் தொடர்ந்து, தங்கத் திருட்டு தொடர்பான செய்திகள் வெளியானபோது, ​​அந்தத் தங்கத் தகடுகள் தனது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதை நடிகர் ஜெயராம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடிகர் ஜெயராமிடம் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜெயராம் இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஜெயராமன் அளித்த வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

நடிகர் ஜெயராம்

அதில், ``கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அந்தப் பயணங்களின் மூலமாகவே உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாகவே எனக்கு கோவர்தனன் அறிமுகமானார்.

சபரிமலை கருவறைக்காக புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என உன்னிகிருஷ்ணன் பொட்டி கூறினார். அதன் அடிப்படையிலேயே அந்த பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பூஜைகளிலும் நான் கலந்துகொண்டேன்." எனக் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க