செய்திகள் :

சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய ஈரான்: சீனா - பாகிஸ்தான் கூட்டணி சாதித்தது என்ன?

post image

கடந்த 38 நாள்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிகக் கடுமையான போர் பதற்றம் நீடித்து வந்தது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ``புதன்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படும்" என எச்சரித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ஈரான், ``இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை பின்வாங்க மாட்டோம்." எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், சீனாவின் அதிரடித் தலையீட்டாலும் பாகிஸ்தானின் சமரச முயற்சியாலும் தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அமெரிக்கா - ஈரான்
அமெரிக்கா - ஈரான்

உலகையே அச்சுறுத்திய ஒரு போரைத் தடுத்து நிறுத்தி இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டில் நடைபெற்ற முந்தையப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவிற்கும், ஈரான் பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இந்நிலையில், ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா களமிறங்கியது.

போர் நீடித்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் என்பதையும், தனது Belt and Road முதலீடுகள் சிதையும் என்பதையும் உணர்ந்த சீனா, ஈரான் மீதுள்ள தனது பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தியது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானுடன் இணைந்து 5 அம்ச அமைதித் திட்டத்தை உருவாக்கினார். சீனாவின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியதுடன், அதிபர் ஜின்பிங்கிற்குத் தனது மரியாதையைத் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமான 'நடுநிலை இடமாக' மாறியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் ஒத்துழைப்போடு, இஸ்லாமாபாத் இந்தத் தூதரகப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கலந்து கொள்கிறார்.

"இஸ்லாமாபாத் ஒப்பந்தம்" என அழைக்கப்படும் இந்த முயற்சி, நிரந்தர அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், போர் நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இஸ்ரேல்-லெபனான் விவகாரம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க

Election 2026: பதவிக்காக பகையாகிறதா அப்பா - மகன் உறவு; தகிக்கும் தமிழக அரசியல் களம்

'தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்பார்கள். தமிழக அரசியல் களத்தில் இந்தப் பழமொழியை இப்போது கொஞ்சம் மாற்றி 'தகப்பனும் பிள்ளையும்' எனச் சொல்லலாம். வடக்கே மறைந்த முலாயம் சிங் யாதவ் ... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' - விசிக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்த திருமா, பிறகு விலகினார... மேலும் பார்க்க