செய்திகள் :

"சர்க்கார் படப்பிடிப்பில் சொன்னதை நினைத்து சிரித்தோம்" - விஜய்யைத் தன் கணவருடன் சந்தித்த வரலட்சுமி

post image

திரைபிரபலங்கள் தொடர்ந்து முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் முதல்வரைச் சந்திருக்கிறார்.

இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டிருக்கும் அவர், "தளபதி! இந்தப் பதிவைப் பற்றி என்ன சொல்வது என்று யோசித்தேன். ஆனால் ஏற்கனவே இதைப் பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்தேன். அதனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

தனது கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்
தனது கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்

மக்கள் 100 விதமான விஷயங்களைப் பேசலாம். ஆனால் நாளின் முடிவில்.. சி. ஜோசப் விஜய்தான் நம்முடைய முதலமைச்சர்... மேலும் அவர் இங்கே நிலைத்து நிற்கவே வந்திருக்கிறார். விமர்சிப்பது எளிது, ஆனால் முதல் முயற்சியிலேயே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அபாரமான துணிச்சலும், மன உறுதியும், தமிழக மக்களின் அளவற்ற அன்பும் தேவை.

இந்த அதிகாரமிக்க பதவியை நாம் மதிப்போம். வார்த்தைகளை விட செயல்களே உரக்கப் பேசும். எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு காலம் உண்மையை உணர்த்தும். அதுவரை, அவர் என்ன சாதிக்கிறார் என்று பார்ப்பதற்குக் கொஞ்சம் பொறுமையையும், மரியாதையையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்துவோம்.

ஐ லவ் யூ சார்.. எப்பொழுதும் நான் ஒரு "விஜய் வெறியன்"தான், அது என்றும் மாறாது. எங்களைச் சந்தித்து, இவ்வளவு நேரம் எங்களுடன் செலவிட்டதற்கு மிக்க நன்றி. 'சர்க்கார்' படப்பிடிப்புத் தளத்தில் நான் அவரிடம் சொன்னதை நினைத்து இப்போது சிரித்தோம். இதுதான் அவருடைய பயணம் என்று எனக்குத் தெரியும்..

தனது கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்
தனது கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்

எப்பொழுதும் அன்பானவர் மற்றும் எளிமையானவர். பெண்கள் நலன் சார்ந்த சில பிரச்னைகளைப் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படப் போகும் அற்புதமான மாற்றங்களைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் சார். உங்கள் தலைமையின் கீழ் தமிழக மக்கள் செழிக்கட்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

இதயம் முரளி: "இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும்னு தோணுச்சு" - 'கனா கானும் காலங்கள்' மோனிஷா ஷேரிங்ஸ்

'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனில் சங்கவியாக நடித்து மக்களுக்கு பேவரிட்டானவர் மோனிஷா ரவிஷங்கர். அத்தொடருக்குப் பிறகு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து முழுமையாகவே விலகி... மேலும் பார்க்க

``விவேக் சார் இருந்திருந்தால் நான் எப்பவோ இயக்குநர் ஆகியிருப்பேன்!" - உருகும் கிளி ராமச்சந்திரன்

நடிகர் விவேக் உடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்... மேலும் பார்க்க

"நானும் பகத் பாசிலும் எப்போதும் அதைப் பற்றி பேசுவோம்!" - 'இதயம் முரளி' கேமியோ பற்றி மாளவிகா மோகனன்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப்... மேலும் பார்க்க

Harshath Khan: "என்னைப் பார்த்து யாரும் இன்ஸ்பையர் ஆகாதீங்க!" - ஹர்ஷத் கான் பேட்டி

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஹர்ஷத் கான் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவார... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி 2: 'இந்த மாதிரி படம்லாம் இப்போ வர்றதே இல்ல'; பாராட்டிய ரஜினி - நெகிழ்ந்த விஷ்ணு விஷால்

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜூலை 3-ஆம் ... மேலும் பார்க்க

Parithabangal: "நான், சுதாகர், டிராவிட் நடிச்ச படங்கள் அடுத்தடுத்த வாரங்கள்ல வருவது..." - கோபி

'ஜமா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபா... மேலும் பார்க்க