செய்திகள் :

சலால் அணை திடீர் திறப்பு: பாகிஸ்தானை நோக்கி பாயும் தண்ணீர்

post image

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணை மற்றும் ரம்பனியில் செனாப் ஆற்றின் குருக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் நீர் மின் திட்ட அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

சலால் அணையின் 5 மதகுகள் வழியே அதிகயளவிலான தண்ணீரை இந்திய அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர்.

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பாகிஸ்தான் நோக்கி ஆர்ப்பரித்து பாய்ந்து செல்கிறது.

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் அணைகளில் இருந்து அதிகயளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதற்றமான சூழலில் இதுபோன்று வெள்ள நீரை திறந்துவிடுவதன் மூலமாக இது பாகிஸ்தான் மீதான மற்றொரு தாக்குதலாக கருதப்படுவதாகவும் செல்லப்படுகிறது.

இதனிடையே, கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 22 போ் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும்... மேலும் பார்க்க

ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் ... மேலும் பார்க்க

ஆம்பூர் அருகே சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தற்காலிக பம்ப... மேலும் பார்க்க

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

ராஜஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூர் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பா... மேலும் பார்க்க