செய்திகள் :

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்
உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்

இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார்.

பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

`சிடி-யை எழுத்து வடிவமாக்க வேண்டும்; ரூ.10 லட்சம் செலுத்துக!' - தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி... மேலும் பார்க்க

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates

உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜிமேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொது... மேலும் பார்க்க

தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச ... மேலும் பார்க்க

UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்

கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக,... மேலும் பார்க்க

`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்... மேலும் பார்க்க