செய்திகள் :

சாத்தான்குளம்: ``மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." - ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

post image

கொ

ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

சாத்தான்குளம் வழக்கு
சாத்தான்குளம் வழக்கு

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ``காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதை விட மரணதண்டனை விதிப்பதே சிறப்பானது." எனக் குறிப்பிட்ட நீதிபதி, 9 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர், ``எங்களைப் போல இன்னொருக் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என நாங்கள் நினைத்தோம். அதற்காகதான் சட்டப்போராட்டத்தில் உறுதியாக இருந்தோம். எங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.

உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்
உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்

நீதிமன்றம் மட்டுமல்ல எல்லாத்துறையினரும் எங்களுக்கு ஒத்துழைத்தார்கள். மேல் முறையீடு சென்றாலும் அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பில் இனி இதுபோல எந்த சம்பவமும் நடைபெறக்கூடாது என நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு அப்படியே செயல்பட்டால் மகிழ்ச்சி. எங்களுக்கு மதுரை நீதிமன்றம் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

`மனைவிக்கு இரண்டு பாஸ்போர்ட்? அமெரிக்கா, துபாயில் சொத்து' - ஹிமந்தா பிஸ்வாவைச் சுற்றும் சர்ச்சை!

அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலும் மே-4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்ற... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன. வேட்பாளர்கள் ... மேலும் பார்க்க

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு ... மேலும் பார்க்க

பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: தமிழ்நாட்டில் முகாமிட்ட பாஜக-வின் முக்கியப் புள்ளிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்கள் இன்று மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்... மேலும் பார்க்க

கோவை தெற்கு: ``எத்தனைப் பேர் வந்தாலும்..." - வேட்புமனு தாக்கலுக்குப் பின் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டின் முதலமை... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர் தங்கம் தென்னரசு' - மு.க.ஸ்டாலின்

விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக மற... மேலும் பார்க்க