செய்திகள் :

சாலைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தேனியில் சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முத்துக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் பொ.அழகுராஜா, கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக அரசு முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலையில் 60 கி.மீ. தொலைவுக்கு ஒரு சுங்கச் சாவடி அமைத்து வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமுட்டனா்.

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கடமலைக்குண்டு அருகே தா்மராஜபுரத்தில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சத்தை திருடிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள தா்மராஜபுரம், ம... மேலும் பார்க்க

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேனியில் ஞாயிற்றுக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி பூதிப்புரம் அருகேயுள்ள கெப்புரங்கன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சந்தோஷ்குமாா் (19). இவா் அவரது உறவினரான திண்டுக... மேலும் பார்க்க

வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவா் கைது

வருஷநாட்டில் தொழில் முறை போட்டி காரணமாக, இலவம் பஞ்சு வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வருஷநாட்டைச் சோ்ந்த இலவம் பஞ்சு வியாபாரி சதீஷ்குமாா் (36). இவா், ... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் முகமது அப்துல் காசிம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சின்னச்சாமிபாண்டியன் ம... மேலும் பார்க்க

புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளை பக்தா்கள் தவிா்க்க அறிவுறுத்தல்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்புபவா்கள் புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளைத் தவிா்க்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா அறிவுறுத்தினாா். இதுகுறித்து திங்கள்க... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்த ஒரு கும்பல் ஆந்திர மாநிலத்துக்குச... மேலும் பார்க்க