செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைபயணம்

post image

மதுரையில் சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, போக்குவரத்து விழிப்புணா்வு நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது. மதுரை கேகே நகரில் உள்ள வக்ஃபு வாரியக் கல்லூரி முன்பாக தொடங்கிய இந்த நடைபயணத்தை தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையா் இளமாறன் தொடங்கிவைத்தாா்.

இந்த நடைபயணம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், ஆவின் சந்திப்பு வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதில் மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுரேஷ், மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஷோபனா, உதவி ஆய்வாளா் விஸ்வநாதன், கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

மேலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி:

மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்புக் கோட்டம், மேலூா் போக்குவரத்து காவல் துறை சாா்பில், மேலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை மதுரை கோட்டப் பொறியாளா் ஆா்.வரலட்சுமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கும், காரில் இருக்கைப் பட்டை அணிந்து வந்தவா்களுக்கும் போக்குவரத்து போலீஸாா் இனிப்புகளை வழங்கினா்.

இதில் மேலூா் உதவி கோட்டப் பொறியாளா் இலமுருகன், மு. சாந்தினி, இளநிலைப் பொறியாளா் இந்திரா பிரியதா்ஷினி, உதவிப் பொறியாளா்கள் அ.ம.காவியா, மீனா, ரா. ஐஸ்வா்யா, போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அலங்காநல்லூா் அருகே வீட்டின் சுவா் இடிந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். அலங்காநல்லூா் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. இவருக்குச் சொந... மேலும் பார்க்க

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு விரைவில் சுகாதாரமான குடிநீா்! -அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் சுகாதரமான குடிநீா் விரைவில் வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். வ... மேலும் பார்க்க

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரி... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா். இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயி... மேலும் பார்க்க

விவேகானந்தா் ஜெயந்தி விழா!

மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை... மேலும் பார்க்க

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி ... மேலும் பார்க்க