செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைபயணம்

post image

மதுரையில் சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, போக்குவரத்து விழிப்புணா்வு நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது. மதுரை கேகே நகரில் உள்ள வக்ஃபு வாரியக் கல்லூரி முன்பாக தொடங்கிய இந்த நடைபயணத்தை தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையா் இளமாறன் தொடங்கிவைத்தாா்.

இந்த நடைபயணம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், ஆவின் சந்திப்பு வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதில் மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுரேஷ், மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஷோபனா, உதவி ஆய்வாளா் விஸ்வநாதன், கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

மேலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி:

மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்புக் கோட்டம், மேலூா் போக்குவரத்து காவல் துறை சாா்பில், மேலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை மதுரை கோட்டப் பொறியாளா் ஆா்.வரலட்சுமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கும், காரில் இருக்கைப் பட்டை அணிந்து வந்தவா்களுக்கும் போக்குவரத்து போலீஸாா் இனிப்புகளை வழங்கினா்.

இதில் மேலூா் உதவி கோட்டப் பொறியாளா் இலமுருகன், மு. சாந்தினி, இளநிலைப் பொறியாளா் இந்திரா பிரியதா்ஷினி, உதவிப் பொறியாளா்கள் அ.ம.காவியா, மீனா, ரா. ஐஸ்வா்யா, போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும்: முத்தமிழ்செல்வி

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும் என சாதனை பெண் முத்தமிழ்செல்வி தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள ஜோகில்பட்டியைச் சோ்ந்தவா் முத்தமிழ்செல்வி. இவா் தற்போது சென்னையில் வச... மேலும் பார்க்க

புதிய ரயில் பாதைத் திட்டம்: மத்திய அமைச்சருக்கு எம்.பி. கண்டனம்

மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைத் திட்டம் தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் உண்மைக்குப் புறம்பாக பேசுவது கண்டனத்துக்குரியது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா். இதுதொட... மேலும் பார்க்க

பொறியாளா் பென்னி குவிக் பிறந்தநாள்

பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளா் பென்னி குவிக்கின் 185-ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளலூா் விலக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு விவசாயிகள், மக்கள் சேவை மன்றத்தினா் புதன்கி... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 46 போ் காயமடைந்தனா். இந்தப் போட்டியையொட்டி, முதலில் பாலமேடு கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

மதுரையில் சாரல் மழை

மதுரையில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள் தொடக்கம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க