செய்திகள் :

சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ

post image

பிரேசில் நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தானாகவே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் 30ம் தேதி பிரேசில் நாட்டின் ஜோவோ பெசோவா நகரில் அமைந்துள்ள அறுடா கமரா (Arruda Câmara) எனும் உயிரியல் பூங்காவில் விலங்குகளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் திடீரென, சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்த இருப்பிடத்திற்குள் தானாகவே உள்நுழைந்திருக்கிறார்.

பிரேசில் உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி இளைஞர் பலி

மரம் ஒன்றின் மூலம் பாதுகாப்புச் சுவரைத்தாண்டி சிங்கத்தின் இருப்பிடத்திற்குள் நுழைந்திருக்கிறார் அவர். மரத்தின் மீதாவது பாதுகாப்பாக பிடித்துக் கொண்டிருக்காமல், சிங்கம் தன்னை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டும் மரத்திலிருந்து சிங்கத்தை நோக்கி கீழ் இறங்கியிருக்கிறார்.

சிங்கமும் தானாக வந்த அந்த இளைஞரை, அப்படியே வாயால் கவ்வி தூக்கிச் சென்று தனக்கு இரையாக்கிவிட்டது. அப்பூங்காவில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் வருவதற்குள் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியாகியிருக்கிறார்.

பிரேசில் நாட்டின் செய்தி ஊடகங்களில் கிடைத்த தகவல்படி சிங்கத்திடம் பலியான அந்த 19 வயது இளைஞர் பெயர் மச்சாடோ என்று கூறப்படுகிறது. அவருக்கு நீண்ட காலமாகவே சிங்கத்திடம் பழக வேண்டும், அதனைப் பராமரிக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறதாம். சமூக ஊடகங்களில் சிங்கம் மனிதர்களிடம் பழகுவதைப் பார்த்து, தன்னிடமும் சிங்கம் நன்றாகப் பழகும் என்று சிங்கத்திடம் சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் பிரேசில் சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரியல் பூங்காக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Rage Bait: 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை; `இது வெறும் சொல் அல்ல' - எச்சரிக்கும் ஆக்ஸ்போர்ட்!

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்போர்ட் அகராதி ஒரு சொல்லைத் தேர்வு செய்து அதை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக அறிவிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு "ரேஜ் பெய்ட்" (Rage Bait) என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருக... மேலும் பார்க்க

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்' எனச் சேர்த்திருக்கிறேன்" - எலான் மஸ்க்

"WTF is" பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன்... மேலும் பார்க்க

`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன நம்பரும்!

ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்சி வாகன எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்... மேலும் பார்க்க

``மனிதர்களையே அடித்துக் கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்?" - நடிகை நிவேதா பெத்துராஜ்

தெருநாய்களை பாதுகாக்க கோரி 'விலங்குகளுக்கான சொர்க்கம்' என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துக... மேலும் பார்க்க

``AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) பதவியைக் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பிபி... மேலும் பார்க்க

``20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" - ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்... மேலும் பார்க்க