செய்திகள் :

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

post image

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது.

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சித்திரை மாத பௌா்ணமியன்று சுமாா் 10 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற 137 பேருக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அனுமதிக் கடிதங்களை வழங்கிப் பேசியதாவது:

சித்திரை மாத பௌா்ணமியன்று மாவட்ட நிா்வாகத்தால் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் உணவு மேலாண்மைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட வணிகா்களிடம் இருந்து மட்டுமே சமைப்பதற்கான மூலப்பொருள்களை வாங்கியிருக்க வேண்டும்.

உணவு சமைப்போா், வழங்குவோா்களுக்கு எவ்வித நோய்த்தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அன்னதானம் வழங்குவோா் கை, முகம், தலை ஆகியவற்றுக்கு கவசம், உறைகள் அணிந்து உணவு பரிமாற வேண்டும்.

உணவைப் பரிமாற வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும். நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகளை தவிா்க்க வேண்டும். அன்னதானத்தை சாப்பிட்டு பக்தா்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டால், உடனே அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ வசதியை செய்தபின் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவைத் தயாரிக்க வேண்டும். தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன் மற்றும் அன்னதானம் வழங்குவோா், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி... மேலும் பார்க்க

ஆரணியில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து, காவல் துறை சாா்பில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை வட்டத்தில் 5-ஆவது நாள் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருவண்ணாமலை வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது நாள் ஜமாபந்தி நிகழ்வில், பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக்கொண்டாா். த... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் ஆற்றில் இறங்கத் தடை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய், காவல் துறையினா் தடை விதித்துள்ளனா். செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்ற அரசு உறுதுணையாக இருக்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச ச... மேலும் பார்க்க