செய்திகள் :

சூடுபிடிக்கும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை; டிடிவி, ஓபிஎஸ்ஸை அரவணைக்கும் அமித்ஷா; எதிர்க்கும் EPS?

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன்

எடப்பாடி- நயினார் சந்திப்பு

இந்தச் சூழலில்தான் இன்று (ஜன.9) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், அவருக்கான இடங்களையும் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாஜக கேட்கும் சீட்களை அதிமுக தருமா, கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி போன்ற கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி?

"எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரைக்கும் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

 மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

அமித் ஷா போடும் கணக்கு

ஆனால் அமித் ஷாவின் நோக்கம் என்னவென்றால் திமுகவிற்கு எதிரான கட்சிகள் எல்லாவற்றையும் நம்முடைய அணிக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

அதனால் அதிமுகவில் டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்களைச் சேர்த்துக்கொள்ள முயல்கிறார்.

ஏன் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்?

56 தொகுதிகளை பாஜக கேட்டு, அதில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்க்கு சீட்களைக் கொடுக்கப் பார்க்கிறார். எடப்பாடிக்கு இது ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. நாளைக்கு இவர்கள் வெற்றி பெற்றால் தனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்.

பாஜகவிற்குத்தான் இருவரும் ஆதரவாக இருப்பார்கள். அதனால் நாம் ஏன் நம் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி

அரவணைக்க நினைக்கும் அமித்ஷா

பாஜக அவர்களுக்கு மட்டும் 30 இடங்களைக் கேட்டால் அதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார் எடப்பாடி. ஆனால் மற்றவர்களுக்காக பாஜக கேட்கும் இடங்களைக் கொடுத்துவிட்டால் நாம்தான் பலவீனமாக இருப்போம் என்று நினைக்கிறார். எடப்பாடிக்கு அதிகாரம் வேண்டும்.

டிடிவியை கூட்டணிக்குள் இணைப்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் இணைத்தால்தான் தென்மாவட்ட ஓட்டுகள் கிடைக்கும். அதனால்தான் அமித்ஷா அரவணைக்க நினைக்கிறார்” என்று கேள்விகளுக்கு விடை அளித்தார்.

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்தி... மேலும் பார்க்க