செய்திகள் :

சென்னை: தோழியைக் கொலைசெய்து விட்டு, உயிரை மாய்த்த இளைஞர்; போலீஸ் விசாரணை!

post image

சிவகங்கை மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகள் பவ்யா (21). இவரின் ஆண் நண்பர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21). இவர்கள் இருவரும் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். இன்று (24.4.2026) அறையை காலி செய்வதாகக் கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் அறையைக் காலி செய்யவில்லை. அதனால் விடுதி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அறை உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அதனால் கதவிலிருந்த கண்ணாடி வழியாக ஊழியர்கள் உள்ளே எட்டிப் பார்த்தனர். அப்போது மின்விசிறியில் பாரதி பெருமாள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக ஊழியர்கள், பெரியமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை
தற்கொலை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பாரதி பெருமாள், தூக்கிலும் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் பவ்யாவும் சடலமாக கிடந்தனர். உடனடியாக இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரின் குடும்பத்தினருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பவ்யாவும் பாரதி பெருமாளும் பழகி வந்தது தெரியவந்தது. மேலும் பவ்யாவை கொலை செய்து விட்டு பாரதி பெருமாள் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் இருவரின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பெரியமேடு போலீஸார் கூறுகையில், ``அறையில் தங்கியிருந்த பாரதி பெருமாளும் பவ்யாவும் கணவன் மனைவி என்றே விடுதியில் கூறியிருக்கிறார்கள். அதோடு பவ்யாவின் கழுத்திலும் கையிலும் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. அதனால்தான் பவ்யாவை பாரதி பெருமாள் கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும்" என்றனர்.

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள... மேலும் பார்க்க

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க