செய்திகள் :

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!

post image

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று திருநீர்​மலை அம்​பேத்​கர் சிலை அருகே நண்​பர்​களு​டன் நின்று பேசிக் கொண்​டிருந்​தார். அப்​போது 3 பைக்குகளில் ஹெல்​மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அன்பழகனை மட்டும் சுற்றி வளைத்து சரமாரி​யாக வெட்​டி ​விட்டு தப்​பிச் சென்​றது. பின்னர் அன்பழகனின் நண்பர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வி.சி.க பிரமுகர் அன்பழகன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சங்கர்நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை வழக்கில் கைதான வீனஸ்

பின்னர், அன்பழகனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோ, பைக்குகளில் வந்த கும்பல், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட வி.சி.க பிரமுகர் அன்​பழகன் மீது 3 கொலை வழக்​கு​கள் உட்பட 14 குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ளன. இதில் கடந்த 2009- ம் ஆண்டு, திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரையும் 2021ம் ஆண்டு பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரான கணேசன் என்பவரையும் கொலை செய்த வழக்குகள் முக்கியமானவை. கணேசன் கொலை வழக்கில் அன்பழகனும் அவரின் நண்பர் நாகல்கேணியைச் சேர்ந்த வீனஸ் என்பவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த அன்பழகன், கட்டடவேலைக்குப் பயன்படுத்தப்படும் சரள் மண் பிசினஸ் செய்து வந்தார். அதனால் அன்பழகனுக்கு வருமானம் அதிகரித்தது. பிசினஸ் தொடர்பாக வீனஸிக்கும் அன்பழகனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர தி.மு.க பிரமுகர் கணேசன் கொலை வழக்கிலும் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்திருக்கிறது. நண்பர்களாக இருந்த அன்பழகன், வீனஸ் ஆகிய இரு தரப்பும் அடிக்கடி மோதி வந்தது. அதனால்தான் அன்பழகன் தன்னுடைய இருப்பிடத்தைக் கூட கே.கே.நகருக்கு மாற்றினார். இந்தநிலையில்தான் கூலிப்படை மூலம் அன்பழகனை வீனஸ் கொலை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வீனஸ் உள்பட சிலரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய... மேலும் பார்க்க

வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெண் - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுனீஸ்வரன். தப்பாட்டக் கலைஞரான இவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தது, அச்சக அதிபர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, வீடு புகுந்து ப... மேலும் பார்க்க

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் கம்மலை இருவர் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சித்வான் மாவட்ட போலீஸார் 25 மற்றும்... மேலும் பார்க்க

மதுரை: 'இரட்டிப்பு லாபம் பெறலாம்' - 'சதுரங்க வேட்டை' பட பாணியில் ஏமாற்றும் Bitcoin மோசடி கும்பல்

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூபாய்... மேலும் பார்க்க

சென்னையில் விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை, ஆந்திராவில் மீட்பு - தாய், டாக்டர் சிக்கிய பகீர் பின்னணி!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் மனைவி பவித்ரா. இவருக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ரௌடியான `குள்ள' கணேஷ், வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறைய... மேலும் பார்க்க

மதுரை: ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி; உறவினர்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம், சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர்கள் அந்திஸ்வரன்- ஆனந்த லெட்சுமி தம்பதி. இவர்களது மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த ... மேலும் பார்க்க