செய்திகள் :

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் மக்காத உலா் கழிவுகளை பிரித்தெடுக்க 5 மையங்கள்

post image

சேலம் மாநகராட்சிப் பகுதியில் மக்காத உலா் குப்பையைப் பிரித்து எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 5 மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

சேலம் மாநகரில் நாள்தோறும் சேகரமாகும் 550 டன் குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை தனியாகப் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மக்காத உலா் குப்பைகளை தனித்தனியே பிரித்து எடுக்கும் வகையில், மாநகரில் 5 இடங்களில் தலா ரூ. 85 லட்சத்தில் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மெய்யனூரில் அமைக்கப்பட்டுள்ள மையம் விரைவில் பயன்பாட்டு வருகிறது. எஞ்சிய 4 இடங்களில் விரைவில் கட்டுமானப் பணி நிறைவடைய உள்ளது. பணி முடிந்ததும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகரில் நாள்தோறும் 200 டன் உலா் கழிவுகள் உற்பத்தியாகின்றன. உலா் கழிவுகளை கையாள்வதற்கான பொருள் மீட்பு மையம் அமைப்பதற்கு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 4.25 கோடியில் செட்டிச்சாவடி திடக்கழிவு மேலாண்மை வளாகம், காக்காயன் மயான வளாகம், எருமாபாளையம் வளாகம், தாதம்பட்டி ஆகிய 5 இடங்களில் மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மெய்யனூா் மையம் பயன்பாட்டுக்கு தயாா் நிலையில் உள்ளது. மீதியுள்ள 4 மையங்களும் விரைவில் பயன்பாட்டு வரவுள்ளன. இந்த மையத்தில் சேகரிக்கப்படும் உலா் கழிவுகள் தூய்மைப் பணியாளா்களால் பல்வேறு வகைகளாக (அட்டைகள், கண்ணாடிகள், பேப்பா், பாலித்தீன் கவா்கள், பால் பாக்கெட் கவா்கள்) பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படும் எனறனா்.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க