செய்திகள் :

வீடு தேடிச் சென்று பஜ்ரங் தள் பிரமுகரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்; புதுக்கோட்டையில் பரபரப்பு!

post image

புதுக்கோட்டை, திருவப்பூர் குட்செட் சாலையைச் சேர்ந்தவர் மெய்யப்பன். இவர் மகன் மோகன்ராஜ் (வயது: 38). இவர், பஜ்ரங் தள் அமைபின் முன்னாள் மாவட்டத் தலைவராகவும், ராமேஸ்வரம் கோட்டப் பொறுப்பாளராகவும் இருந்தார். இவரோடு தாய் சுசிலா மற்றும் மனைவி சூர்ய பிரியா மற்றும் மூன்று குழந்தைகள் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று மோகன்ராஜைப் பார்க்க அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த மோகன்ராஜ், வந்தரிடம் பேசிக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்று வீட்டின் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். திடீரென அந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிற்றில் குத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மோகன்ராஜ் சோபாவில் இருந்து எழுந்து வெளியே வந்துள்ளார். வாசல்படியில் மோகன்ராஜைப் பிடித்து கழுத்தை அறுத்து கீழே தள்ளிவிட்டு, வேகமாகச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த தாய் சுசிலா, மனைவி சூர்ய பிரியா அலறியடித்துகொண்டு கத்தியுள்ளனர்.

மோகன்ராஜ்

ஆனால், அக்கம் பக்கத்தில் இருந்து உறவினர்கள், தெரிந்தவர்கள் வருவதற்குள் கொலைசெய்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, புதுக்கோட்டை டவுன் டி.எஸ்.பி பிருந்தா மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர், இறந்த மோகன்ராஜ் உடலை உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்த திருக்கோகர்ணம் போலீஸார், கொலையாளியைத் தேடி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MP: பில்லி சூனிய நம்பிக்கை; பக்கத்து வீட்டுக்காரர்களை வெட்டிப் பலி கொடுத்த நபர்; வெளியான பகீர் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதற்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை கடவுளுக்குப் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அங்குள்ள அ... மேலும் பார்க்க

சென்னை: பெண் காவலர் மர்ம மரணம்; உள்ளாடையுடன் சடலம் மீட்பு; கணவரிடம் விசாரணை

சென்னை எழும்பூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் சிலம்பரசன். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், எழும்பூர் குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார்.சிலம்பரசனுக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி... மேலும் பார்க்க

நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து சல்மான் கான் மைத்துனர்! தொடரும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் சம்பவங்கள்

மும்பையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் பல கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். வாட்ஸ் ஆப் மூலம் ரன்வீர் சிங் செ... மேலும் பார்க்க

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க