பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கு...
பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில் அந்த மாணவி பயணம் செய்தபோது, மாணவியின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பேரணாம்பட்டு டவுன் மவுலானா வீதியைச் சேர்ந்த தோல் வியாபாரி அப்துல் லத்தீப் (52) என்பவன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றிருக்கிறான். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி பேருந்தில் பயணம் செய்த சக பயணிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

அப்போது, அப்துல் லத்தீப் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றிருக்கிறான். இதைக் கவனித்த பயணிகள் அவனைப் பிடித்து தாக்கி, பேரணாம்பட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, `வழக்கு ஏதும் வேண்டாம்’ எனக்கூறி அப்துல் லத்தீப்பை விடுவிக்கச் சொல்லி அரசியல் பின்னணியுடைய உள்ளூர் நபர்கள் இருவர், போலீஸாரிடம் சமரசம் பேசியிருக்கின்றனர். இது குறித்து, பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய பின்னரே வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் லத்தீப்பை கைது செய்திருக்கின்றனர்.


















